S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!

Apr 30, 2026,03:07 PM IST

- எஸ். ஷர்மிளா, துபாய்


உனக்குள் ஒருவன் தீப்பொறியாய் எரிகிறான்


உன் அமைதிக்குள் 

புயலாக வீசுகிறான் 


சொல்லாத வார்த்தைகள் அனைத்தையும் சுமந்து


பேசாமல் இருந்தாலும் 

பேச வைக்கிறான் 


உன் தோல்விகளில் 

தோள் கொடுக்கிறான் 


உன் பலவீனத்தை 

பலமாக மாற்றுகிறான்


அவன் கண்களில் 

தோல்வி இல்லை




ஒவ்வொரு வீழ்ச்சியிலும் வெற்றியை விதைக்கிறான்


ஓடினால் பின்னே 

துரத்தி வருகிறான்


உன்  பாதைக்கு வழி 

காட்டுகிறான்


உலகம் உன்னை 

சந்தேகிக்கும் நேரத்தில்


அவன் மட்டும் உறுதியாக நம்புகிறான்


உனக்குள் இருக்கும் 

தீயை அணைக்காதே


அதுவே உன்னை உருவாக்கும் உண்மையான நீ


(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர் எஸ்.ஷர்மிளா, ஆசிரியர், துபாய். மதுரக் குரல் மங்கை, கற்கண்டுக் குயில் இனியாள் என்றும் புகழப்படுகிறார் கவிஞர் எஸ். ஷர்மிளா)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்