- எஸ். ஷர்மிளா, துபாய்
உனக்குள் ஒருவன் தீப்பொறியாய் எரிகிறான்
உன் அமைதிக்குள்
புயலாக வீசுகிறான்
சொல்லாத வார்த்தைகள் அனைத்தையும் சுமந்து
பேசாமல் இருந்தாலும்
பேச வைக்கிறான்
உன் தோல்விகளில்
தோள் கொடுக்கிறான்
உன் பலவீனத்தை
பலமாக மாற்றுகிறான்
அவன் கண்களில்
தோல்வி இல்லை

ஒவ்வொரு வீழ்ச்சியிலும் வெற்றியை விதைக்கிறான்
ஓடினால் பின்னே
துரத்தி வருகிறான்
உன் பாதைக்கு வழி
காட்டுகிறான்
அவன் மட்டும் உறுதியாக நம்புகிறான்
உனக்குள் இருக்கும்
தீயை அணைக்காதே
அதுவே உன்னை உருவாக்கும் உண்மையான நீ
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர் எஸ்.ஷர்மிளா, ஆசிரியர், துபாய். மதுரக் குரல் மங்கை, கற்கண்டுக் குயில் இனியாள் என்றும் புகழப்படுகிறார் கவிஞர் எஸ். ஷர்மிளா)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}