- எஸ். ஷர்மிளா, துபாய்
உனக்குள் ஒருவன் தீப்பொறியாய் எரிகிறான்
உன் அமைதிக்குள்
புயலாக வீசுகிறான்
சொல்லாத வார்த்தைகள் அனைத்தையும் சுமந்து
பேசாமல் இருந்தாலும்
பேச வைக்கிறான்
உன் தோல்விகளில்
தோள் கொடுக்கிறான்
உன் பலவீனத்தை
பலமாக மாற்றுகிறான்
அவன் கண்களில்
தோல்வி இல்லை

ஒவ்வொரு வீழ்ச்சியிலும் வெற்றியை விதைக்கிறான்
ஓடினால் பின்னே
துரத்தி வருகிறான்
உன் பாதைக்கு வழி
காட்டுகிறான்
அவன் மட்டும் உறுதியாக நம்புகிறான்
உனக்குள் இருக்கும்
தீயை அணைக்காதே
அதுவே உன்னை உருவாக்கும் உண்மையான நீ
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர் எஸ்.ஷர்மிளா, ஆசிரியர், துபாய். மதுரக் குரல் மங்கை, கற்கண்டுக் குயில் இனியாள் என்றும் புகழப்படுகிறார் கவிஞர் எஸ். ஷர்மிளா)
A Silk Wrapped in Love
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
வகுப்பறை!
{{comments.comment}}