S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!

Apr 30, 2026,03:07 PM IST

- எஸ். ஷர்மிளா, துபாய்


உனக்குள் ஒருவன் தீப்பொறியாய் எரிகிறான்


உன் அமைதிக்குள் 

புயலாக வீசுகிறான் 


சொல்லாத வார்த்தைகள் அனைத்தையும் சுமந்து


பேசாமல் இருந்தாலும் 

பேச வைக்கிறான் 


உன் தோல்விகளில் 

தோள் கொடுக்கிறான் 


உன் பலவீனத்தை 

பலமாக மாற்றுகிறான்


அவன் கண்களில் 

தோல்வி இல்லை




ஒவ்வொரு வீழ்ச்சியிலும் வெற்றியை விதைக்கிறான்


ஓடினால் பின்னே 

துரத்தி வருகிறான்


உன்  பாதைக்கு வழி 

காட்டுகிறான்


உலகம் உன்னை 

சந்தேகிக்கும் நேரத்தில்


அவன் மட்டும் உறுதியாக நம்புகிறான்


உனக்குள் இருக்கும் 

தீயை அணைக்காதே


அதுவே உன்னை உருவாக்கும் உண்மையான நீ


(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர் எஸ்.ஷர்மிளா, ஆசிரியர், துபாய். மதுரக் குரல் மங்கை, கற்கண்டுக் குயில் இனியாள் என்றும் புகழப்படுகிறார் கவிஞர் எஸ். ஷர்மிளா)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

news

NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை

news

TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!

news

எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!

news

தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்