சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

May 11, 2026,04:55 PM IST

- அ. தாமஸ்


ஆவணங்கள் நம்மை அதிகாரப்படுத்தும். ஆனால்  ஆணவமோ நம்மையே நாம் அறிய விடாமல் கெடுக்கும்.


தகுதியறிந்து தடம் பதிப்பதே தன்னிலை உயர்த்தும் உயரிய நெறி. தன்னிலை அறியாதவர்களே ஆணவத்தால் ஆட்கொள்ளப்பட்டு தன் அடையாளம் இழந்து நிற்கிறார்கள்.


பதவி கிடைக்கிறது என்பதற்காக பல்லி பலசாலி ஆகிவிடாது.எனவே தகுதியான பதவியைப் பெறுவதில் தான் நாம் தன் முனைப்புக் காட்ட வேண்டும்.




தண்ணீர் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஆனால் எந்நிலையிலும் தண்ணீர் என்ற தன்மையை மாற்றிக் கொள்வதில்லை.இந்நிலை உணர்ந்த மனிதர்களே உயர்நிலை அடைகிறார். 


நம்மிடம் கருணை பெற்றவன் நம்மைக் கடவுளாகப் பார்க்கிறான் என்பதற்காக நாம் கடவுளாகி விட முடியாது. எனவே என் நிலையிலும் நம் நிலை உணரும் பொழுதே உயர்நிலை அடைய முடியும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்

news

JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?

news

சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்

news

Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!

news

ஆசையில பாத்திகட்டி!

news

நிதானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்