பப்லுவுக்கும் ஷீத்தலுக்கும் என்னதான் ஆச்சு.. "ஷாக்" காதல்.. பிரிவுக்குக் காரணம் கேட்கும் ரசிகர்கள்!

Dec 10, 2023,05:33 PM IST

சென்னை : நடிகர் பப்லு பிருத்விராஜ் தனது காதலியையும் விவாகரத்து செய்து விட்டதாக புதிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. பப்லுவின் புலம்பல், காதலியின் இன்ஸ்டா பதிவு ஆகியன ரசிகர்களிடம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பல குணசித்திர வேடங்கள், ஹீரோ வேடங்களிலும் நடித்தவர் பப்லு பிருத்விராஜ். இவர் தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து கலக்கி வருகிறார். 56 வயதாகும் பப்லு, 1994 ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 26 வயதில் ஆட்டிசம் பாதித்த மகன் ஒருவர் உள்ளார். தனது மகன் குறித்து பல உருக்கமான, அன்பான பதிவுகளை பதிவிட்டு வந்த பப்லு, திடீரென தனத மனைவியை விவாகரத்து செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். அதற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்தார்.




இந்நிலையில் சமீபத்தில் தன்னை விட 33 வயது இளையவரும், தனது மகனை விட வயது குறைந்தவருமான ஷீத்தல் என்பவரை தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமீபத்தில் மீடிக்களில் ஓப்பனாக அறிவித்தார் பப்லு. இவர்கள் இருவரும் ரகசியமாக சேர்ந்து வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. தெலுங்கானாவை சேர்ந்த ஷீத்தலுடன் வெளியில் செல்வது, டான்ஸ் ஆடுவது போன்ற பல வீடியோக்கள், போட்டோக்கள் ஆகியவற்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார் பப்லு.


இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு பிறந்த நாள் வந்தது. இந்த பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்களையும் இன்ஸ்டாவின் பகிர்ந்தார் பப்லு. ஆனால் அந்த போட்டோக்களில் அவரது காதலி ஷீத்தல் இல்லை. அதோடு ஷீத்தல் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அகற்றினார் பப்லு. இதனால் சந்தேகம் அடைந்த ரசிகர்கள், இது பற்றி கேள்வி எழுப்பினர். அவரையும் விவாகரத்து செய்து விட்டீர்களா? என்று கூட சிலர் ஓப்பனாக கேட்டனர்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக புலம்பி தள்ளி உள்ளார் பப்லு, கடவுள் தனது வாழ்க்கையை தொங்கலில் விட்டு விட்டார். தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பகிர்வது தவறு என்பதை புரிந்து கொண்டேன். இதற்கு மேலும் அறிவு வரவில்லை என்றால் தன்னை விட முட்டாள் இந்த உலகில் யாரும் இல்லாமல் இருப்பார்கள் என இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




இதற்கிடையில் பப்லுவிற்கும், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஷீத்தல் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்குள் எப்படி பப்லுவை எனது கணவர், நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன் என சொல்வீர்கள் என கேட்டுள்ளார். இது பப்லுவிற்கு பேரிடியாக அமைந்துள்ளதாக பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.


அப்படி என்னதான் நடந்தது இருவருக்குள்ளும்.. இப்போது இருவரது இன்ஸ்டா பக்கங்களிலும் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்கள், வீடியோக்களை இருவரும் நீக்கி விட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

இலவச ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு வேட்டி சேலை... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

news

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு

news

திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது

news

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு

news

திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு

news

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் உத்தரவு

news

தவிர்க்க முடியாத சிறுத்தைகள்.. தடதடக்கும் அரசியல் பாதை.. திரும்பிப் பார்க்க வைக்கும் திருமா

news

மனுதாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே.. முடிவுக்கு வருகிறதா திமுக தொகுதி பங்கீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்