சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மாரடைப்பால் மரணமடைந்தார்.
தமிழில் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. விவேக், வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னச் சின்ன கேரக்டர்களில் வந்தாலும் கூட மக்கள் மனதில் நச்சென்று நிற்கும் வகையிலான பாத்திரங்களில் நடித்தவர்.
அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிராதீக, சீப்பை ஒளிச்சு வச்சுட்டேன் பார்த்தீங்களா என்பன போன்ற காமெடி வசனங்களால் பிரபலமானவர் போண்டா மணி.

விவேக் மறைவு மற்றும் வடிவேலுவுக்கு வாய்ப்பு குறைவு போன்ற காரணங்களால் இவருக்கும் வாய்ப்புகள் குறைந்த போயின. இதனால் சமீப காலமாக அவர் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. மேலும், அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு உதவுமாறு சக நடிகர்கள் கோரிக்கையும் விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் போண்டாமணி திடீர் மாரடைப்பால் மரணத்தைத் தழுவினார். வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
60 வயதாகும் போண்டா மணி இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். பவுனு பவுனுதான் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மருதமலை, சுந்தரா டிராவல்ஸ், வேலாயுதம், வின்னர் உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். பெரும்பாலும் வடிவேலு, விவேக் டீமுடன் இணைந்து கலக்கியிருப்பார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}