சென்னை: பூலோக அதிசயங்களில் ஒன்றுதான் நம்ம பிரேம்ஜி அமரன்.. அவர் செய்யாத ரொமான்ஸ் இல்லை.. பண்ணாத ஜாலி இல்லை.. ஆனால் கல்யாணம் மட்டும் பண்ணவே மாட்டேங்குறார்.. கேட்டால், நானா மாட்டேன்னு சொல்றேன்.. பொண்ணு அமையணும் பாஸ் என்று நழுவி ஓடி விடுகிறார்.
ஆனால் இன்று திடீரென ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணப் போறேன்.. டாட்" என்று போட்டு விட்டுப் போயுள்ளார்.
இது சும்மானாச்சுக்கும் போட்ட டிவீட்டா, இல்லை சீரியஸாகவே போட்ட டிவீட்டா என்று தெரியவில்லை. ஆனால் இந்த டிவீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வா தல வா தல.. இப்பவாச்சும் ஆகப் போகுதே என்று பலர் ஜாலியாக கலாய்த்துள்ளனர். இன்னும் சிலரோ, சார் கல்யாணம் பண்ணிக்காதீங்க.. அப்பத்தான் ஜாலியா இருக்க முடியும் என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.
சிலரது கல்யாணங்கள் பல காலமாக பேசப்படும்.. ஆனால் பிரேம்ஜியைப் பொறுத்தவரை ஏன் கல்யாணம் ஆகலை என்பதுதான் அதீதமாக பேசப்பட்டு வருகிறது. கல்யாணம்தான் ஆகலையே தவிர பிரேம்ஜியின் ஜாலி, சந்தோஷம் ஒரு அவுன்ஸ் கூட குறைந்ததில்லை. நண்பர்கள் புடை சூழ சூப்பர் ஜாலியாக இருக்கக் கூடியவர் பிரேம்ஜி.
மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். பொட்டென்று போட்டு உடைத்து விட்டு போய் விடுவார். குறிப்பாக இவருக்கு ஹேட்டர்ஸே இல்லை என்பது மிகப் பெரிய விஷயம்.. அந்த அளவுக்கு ஜாலியான நட்பான மனிதர்தான் பிரேம்ஜி.
புது வருஷத்தன்று சொன்ன வார்த்தையில் பொய் இருக்க வாய்ப்பில்லை. எனவே சீரியஸாகவே பிரேம்ஜி அமரனுக்கு கல்யாணம் நடக்கப் போவதாகவே பலரும் நம்புகின்றனர்.. ஆச்சுன்னா சந்தோஷம்தான்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}