சென்னை: பூலோக அதிசயங்களில் ஒன்றுதான் நம்ம பிரேம்ஜி அமரன்.. அவர் செய்யாத ரொமான்ஸ் இல்லை.. பண்ணாத ஜாலி இல்லை.. ஆனால் கல்யாணம் மட்டும் பண்ணவே மாட்டேங்குறார்.. கேட்டால், நானா மாட்டேன்னு சொல்றேன்.. பொண்ணு அமையணும் பாஸ் என்று நழுவி ஓடி விடுகிறார்.
ஆனால் இன்று திடீரென ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணப் போறேன்.. டாட்" என்று போட்டு விட்டுப் போயுள்ளார்.
இது சும்மானாச்சுக்கும் போட்ட டிவீட்டா, இல்லை சீரியஸாகவே போட்ட டிவீட்டா என்று தெரியவில்லை. ஆனால் இந்த டிவீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வா தல வா தல.. இப்பவாச்சும் ஆகப் போகுதே என்று பலர் ஜாலியாக கலாய்த்துள்ளனர். இன்னும் சிலரோ, சார் கல்யாணம் பண்ணிக்காதீங்க.. அப்பத்தான் ஜாலியா இருக்க முடியும் என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.

சிலரது கல்யாணங்கள் பல காலமாக பேசப்படும்.. ஆனால் பிரேம்ஜியைப் பொறுத்தவரை ஏன் கல்யாணம் ஆகலை என்பதுதான் அதீதமாக பேசப்பட்டு வருகிறது. கல்யாணம்தான் ஆகலையே தவிர பிரேம்ஜியின் ஜாலி, சந்தோஷம் ஒரு அவுன்ஸ் கூட குறைந்ததில்லை. நண்பர்கள் புடை சூழ சூப்பர் ஜாலியாக இருக்கக் கூடியவர் பிரேம்ஜி.
மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். பொட்டென்று போட்டு உடைத்து விட்டு போய் விடுவார். குறிப்பாக இவருக்கு ஹேட்டர்ஸே இல்லை என்பது மிகப் பெரிய விஷயம்.. அந்த அளவுக்கு ஜாலியான நட்பான மனிதர்தான் பிரேம்ஜி.
புது வருஷத்தன்று சொன்ன வார்த்தையில் பொய் இருக்க வாய்ப்பில்லை. எனவே சீரியஸாகவே பிரேம்ஜி அமரனுக்கு கல்யாணம் நடக்கப் போவதாகவே பலரும் நம்புகின்றனர்.. ஆச்சுன்னா சந்தோஷம்தான்..!
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}