சென்னை: வெளிநாட்டு பயணம் முதல் படப்பிடிப்பு தளம் வரை ஒரே பரபரப்பாக ரெஸ்ட்டே இல்லாமல் உழைத்து கொண்டு இருக்கிறாராம் நடிகர் விஷால். எப்படிப்பா இவரால் மட்டும் இப்படியெல்லாம் முடியுது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பூஜை படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் விஷால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தார். அப்போது மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினா. இதனை தொடர்ந்து அவர் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி இருந்தார்.
விஜயகாந்த் இல்லத்தில் இருந்து ஆறுதல் கூறி விட்டு அன்று மாலையே இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் படப்பிடிப்பிற்காக திருப்பதி சென்றார். மூன்று நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர் . ஆனால் கேப்பே விடாமல் நடித்தத விஷால், மூன்று நாட்களில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை இரண்டே நாட்களில் முடித்துவிட்டு தயாரிப்பாளர்களுக்கு 30 லட்சம் ரூபாயை சேமித்துக் கொடுத்து விட்டாராம்.
படப்பிடிப்பு தளத்தில் விஷாலின் ஒத்துழைப்பும், ஓய்வே இல்லாமல் பணியாற்றிய அவருடைய செயல்பாடும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்தினம் படத்தில் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ரத்தினம் படம் விஷாலின் 34 ஆவது படம். இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அதிரடி திரில்லர் படமாக அமைந்துள்ளது.
ரத்தினம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}