சென்னை: வெளிநாட்டு பயணம் முதல் படப்பிடிப்பு தளம் வரை ஒரே பரபரப்பாக ரெஸ்ட்டே இல்லாமல் உழைத்து கொண்டு இருக்கிறாராம் நடிகர் விஷால். எப்படிப்பா இவரால் மட்டும் இப்படியெல்லாம் முடியுது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பூஜை படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் விஷால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தார். அப்போது மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினா. இதனை தொடர்ந்து அவர் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி இருந்தார்.
விஜயகாந்த் இல்லத்தில் இருந்து ஆறுதல் கூறி விட்டு அன்று மாலையே இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் படப்பிடிப்பிற்காக திருப்பதி சென்றார். மூன்று நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர் . ஆனால் கேப்பே விடாமல் நடித்தத விஷால், மூன்று நாட்களில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை இரண்டே நாட்களில் முடித்துவிட்டு தயாரிப்பாளர்களுக்கு 30 லட்சம் ரூபாயை சேமித்துக் கொடுத்து விட்டாராம்.

படப்பிடிப்பு தளத்தில் விஷாலின் ஒத்துழைப்பும், ஓய்வே இல்லாமல் பணியாற்றிய அவருடைய செயல்பாடும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்தினம் படத்தில் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ரத்தினம் படம் விஷாலின் 34 ஆவது படம். இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அதிரடி திரில்லர் படமாக அமைந்துள்ளது.
ரத்தினம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}