கல்லூரி மாணவர்களிடையே.. போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

Sep 02, 2024,03:21 PM IST

சென்னை:   கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் சர்வசாதாரணமாக புழங்குகிறது என எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், என பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இருப்பினும் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் நிறைய புழக்கம் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இது தவிர போதைப்பொருள் புழக்கம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.




இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  தேடுதல் வேட்டையில் முக்கியமான கல்லூரியான எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவில் புழக்கம் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தவிர கல்லூரி வளாகத்தில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தி கூடிய போதை ‌வஸ்துகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள்  சர்வசாதாரணமாக புழங்குகிறது. போதைப் பொருள் புழக்கமும் குறைந்தபாடில்லை. அதேபோல் கொலை பட்டியல்கள் தொடர்கின்றன.


வெளிநாட்டு போட்டோ சூட்டுகளிலும், பகட்டு கார் ரேஸிலும் கவனம் செலுத்தும் அரசு போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு, சீர்கேடு போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளமாக உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும் போதைப் பொருளை ஒழிப்பதிலும் முதல்வர் மு க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்