சென்னை: கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் சர்வசாதாரணமாக புழங்குகிறது என எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், என பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் நிறைய புழக்கம் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இது தவிர போதைப்பொருள் புழக்கம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையில் முக்கியமான கல்லூரியான எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவில் புழக்கம் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர கல்லூரி வளாகத்தில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தி கூடிய போதை வஸ்துகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் சர்வசாதாரணமாக புழங்குகிறது. போதைப் பொருள் புழக்கமும் குறைந்தபாடில்லை. அதேபோல் கொலை பட்டியல்கள் தொடர்கின்றன.
வெளிநாட்டு போட்டோ சூட்டுகளிலும், பகட்டு கார் ரேஸிலும் கவனம் செலுத்தும் அரசு போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு, சீர்கேடு போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளமாக உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும் போதைப் பொருளை ஒழிப்பதிலும் முதல்வர் மு க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி
ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை
மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?
Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
TVK Campaign: முதலில் நாளிலேயே 3 இடங்களில் பிரச்சாரம் ரத்து... என்ன செய்ய போகிறார் விஜய்?
Tamil Nadu Elections: பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
IPL 2026.. ஐபிஎல் கிரிக்கெட் 2026 : பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்
{{comments.comment}}