சென்னை: கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் சர்வசாதாரணமாக புழங்குகிறது என எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், என பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் நிறைய புழக்கம் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இது தவிர போதைப்பொருள் புழக்கம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையில் முக்கியமான கல்லூரியான எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவில் புழக்கம் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர கல்லூரி வளாகத்தில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தி கூடிய போதை வஸ்துகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் சர்வசாதாரணமாக புழங்குகிறது. போதைப் பொருள் புழக்கமும் குறைந்தபாடில்லை. அதேபோல் கொலை பட்டியல்கள் தொடர்கின்றன.
வெளிநாட்டு போட்டோ சூட்டுகளிலும், பகட்டு கார் ரேஸிலும் கவனம் செலுத்தும் அரசு போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு, சீர்கேடு போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளமாக உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும் போதைப் பொருளை ஒழிப்பதிலும் முதல்வர் மு க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
{{comments.comment}}