சென்னை: சட்டமன்ற வளாகத்திலேயே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முனுசாமி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணித்தார். அதற்கு அடுத்த படியாக, கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போதும், செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்தார். இவ்வாறு செய்த செங்கோட்டையனின் செயல் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தமிழக சட்டசபை வளாகம் வரை வந்த செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்த கொள்ளாமல் புறக்கணித்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். சட்டபேரவை கூடுவதற்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசினார்.
அப்போதும் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்து பேசவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து பல முறை செங்கோட்டையன் சந்திப்பதை தவிர்த்தும் வந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. அதுமட்டுமின்றி செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதை அவர் கிட்ட கேளுங்க. காரணம் அவரை கேட்டால் தானே தெரியும். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும் என்று கூறினார்.
இந்நிலையில், சட்ட பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு சட்டபேரவையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்வில்லை. நேரடியாக சட்டமன்றம் வளாகத்திற்கு வந்த செங்கோட்டையனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முனுசாமி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
{{comments.comment}}