சென்னை: லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை இன்று அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், விறுவிறுப்பான தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இன்று அதிமுக கூட்டணி தெளிவாகி விட்டது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

வடசென்னை - ராயபுரம் மனோ , தென் சென்னை- ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ், விழுப்புரம் (தனி) - பாக்யராஜ், சேலம்- விக்னேஷ், நாமக்கல் -தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக், கரூர் -கே.ஆர்.என்.தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், மதுரை - டாக்டர் சரவணன் தேனி- நாராயணசாமி, ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், நாகப்பட்டனம் (தனி) - டாக்டர் கர்சித் சங்கர், ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
ஏன் எதற்கு எதனால்?
டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!
NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
{{comments.comment}}