அதிமுகவில் சீட் வேணுமா.. பிப். 21ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்.. எடப்பாடி பழனிச்சாமி

Feb 19, 2024,05:24 PM IST

சென்னை: பிப்., 21ம் தேதி முதல் அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வர உள்ள நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடித்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 21ம் தேதி மனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளன.இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 


அதில் கூறப்பட்டுள்ளதாவது:




நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


பொது தொகுதியாக இருந்தால் 20,000மும் மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதே போல், திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்ப மனு படிவங்கள் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்