சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம், புகழ்பெற்ற கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) கோவாவில், இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாகவும் திரையிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய அழியாத மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். அமரன், சர்வதேசப் போட்டியில் கோல்டன் பீகாக் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கோவாவில் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாக இது திரையிடப்பட உள்ளது என்பதையும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி மற்றும் சக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய 'India’s Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் படம், அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட அசோக சக்கரத்தைப் பெறுவதற்காக தலைநகருக்குச் செல்லும் போது, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், முகுந்தின் பயணத்தை விவரிக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ராகுல் போஸ் மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}