சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம், புகழ்பெற்ற கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) கோவாவில், இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாகவும் திரையிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய அழியாத மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். அமரன், சர்வதேசப் போட்டியில் கோல்டன் பீகாக் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கோவாவில் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாக இது திரையிடப்பட உள்ளது என்பதையும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி மற்றும் சக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய 'India’s Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் படம், அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட அசோக சக்கரத்தைப் பெறுவதற்காக தலைநகருக்குச் செல்லும் போது, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், முகுந்தின் பயணத்தை விவரிக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ராகுல் போஸ் மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பிறவா வரம் அளிக்கும் பேரூர் பட்டீஸ்வரர்.. இன்றும் நடக்கும் 5 அதிசயங்கள்!
99% பாட்டாளி மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ்
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு.. கூடவே தாத்தாவும்.. யார் இந்த சாண்டா கிளாஸ்? .. தெரிஞ்சுக்குவோமா மக்களே!
இருள் வீழும்போது.. நம்பிக்கை பிறக்கிறது.. Echoes of Truimph
எடப்பாடி பழனிச்சாமியுடன் இணையும் பேச்சிற்கே இடமில்லை...ஓபிஎஸ் திட்டவட்டம்
வகுப்பறை என்னும் ஆசான்!
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
{{comments.comment}}