சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம், புகழ்பெற்ற கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) கோவாவில், இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாகவும் திரையிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய அழியாத மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். அமரன், சர்வதேசப் போட்டியில் கோல்டன் பீகாக் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கோவாவில் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாக இது திரையிடப்பட உள்ளது என்பதையும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி மற்றும் சக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய 'India’s Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் படம், அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட அசோக சக்கரத்தைப் பெறுவதற்காக தலைநகருக்குச் செல்லும் போது, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், முகுந்தின் பயணத்தை விவரிக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ராகுல் போஸ் மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}