சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம், புகழ்பெற்ற கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) கோவாவில், இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாகவும் திரையிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய அழியாத மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். அமரன், சர்வதேசப் போட்டியில் கோல்டன் பீகாக் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கோவாவில் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாக இது திரையிடப்பட உள்ளது என்பதையும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி மற்றும் சக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய 'India’s Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் படம், அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட அசோக சக்கரத்தைப் பெறுவதற்காக தலைநகருக்குச் செல்லும் போது, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், முகுந்தின் பயணத்தை விவரிக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ராகுல் போஸ் மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பூ வாசம் புறப்படும்.. When Time Returns as Fragrance!
எண்ணங்களை அழகாக்கும் வண்ணங்கள்.. Paint your joy in different shades of life
என் பாசத்துக்குரிய அம்மாவும், மாமியாரும்.. My dear Mom & Mom in law
நான் கற்றுக் கொண்ட சிறந்த பாடம்.. The greatest lessons I have learnt is!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்... 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. 4 நாட்கள் லீவு வருகிறது!
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
மக்கள் சேவையே மகேசன் சேவை.. Service to Humanity!
{{comments.comment}}