பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!

May 06, 2025,04:56 PM IST

சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொது தேர்வுகள் கடந்த, மார்ச் 3 தொடங்கி 25 ஆம் தேதி வரை  நடைபெற்றன. இதில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.


இதனையடுத்து  ஏப்ரல் ஒன்றாம் தேதி பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கி தேர்வு முடிவுகள் வெளியீடு  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும்  திட்டமிடப்பட்டிருந்தது.  




இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு பணிகள் விரைவாக நிறைவடைந்த நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே  தேர்வு முடிவுகள் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது மே எட்டாம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-ம் தேதி காலை 9 மணிக்கு + 2 ரிசல்ட் வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


மேலும் dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில்  அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்