கமலமுகக் கவர்ச்சியிலே கண்கள் குளமாகுதே!

Feb 03, 2026,10:12 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


எண்ணமிருக்குது

எழுத்துமிருக்குது

கண்ணும் இருக்குது

கவிதைபிறக்குது

கண்டது போல்

விண்டுரைக்க

மண்டு என்னால்

முடியலையே


எழுதி எழுதி அழிக்கிறேன்

எழுத்தில் அவன்

அடக்கமா

எழில் அரக்கன்

இதயத்தையே

மெழுகாய் ஆக்கி அழிக்கிறான்




கண்கள் என்னைத் தின்னுமே

கதறுகிறேன்

குழந்தையாய்

கமலமுகக் கவர்ச்சியிலே

கண்கள் குளமாகுதே


கரங்கள் தன்னில் வில்லும்

அம்பும்

காலமெலாம்

மயக்குமே

இடை தனிலே மரவுரியே

ஐயோ என்னைக்கொல்லுதே


இறுதியாக இணைமலர்கள் இதயத்தையே

ஈர்க்குமே

இப்படி ஒரு அற்புதமா

எப்படிச் சொல்வேனதே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்