கமலமுகக் கவர்ச்சியிலே கண்கள் குளமாகுதே!

Feb 03, 2026,10:12 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


எண்ணமிருக்குது

எழுத்துமிருக்குது

கண்ணும் இருக்குது

கவிதைபிறக்குது

கண்டது போல்

விண்டுரைக்க

மண்டு என்னால்

முடியலையே


எழுதி எழுதி அழிக்கிறேன்

எழுத்தில் அவன்

அடக்கமா

எழில் அரக்கன்

இதயத்தையே

மெழுகாய் ஆக்கி அழிக்கிறான்




கண்கள் என்னைத் தின்னுமே

கதறுகிறேன்

குழந்தையாய்

கமலமுகக் கவர்ச்சியிலே

கண்கள் குளமாகுதே


கரங்கள் தன்னில் வில்லும்

அம்பும்

காலமெலாம்

மயக்குமே

இடை தனிலே மரவுரியே

ஐயோ என்னைக்கொல்லுதே


இறுதியாக இணைமலர்கள் இதயத்தையே

ஈர்க்குமே

இப்படி ஒரு அற்புதமா

எப்படிச் சொல்வேனதே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்