கமலமுகக் கவர்ச்சியிலே கண்கள் குளமாகுதே!

Feb 03, 2026,10:12 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


எண்ணமிருக்குது

எழுத்துமிருக்குது

கண்ணும் இருக்குது

கவிதைபிறக்குது

கண்டது போல்

விண்டுரைக்க

மண்டு என்னால்

முடியலையே


எழுதி எழுதி அழிக்கிறேன்

எழுத்தில் அவன்

அடக்கமா

எழில் அரக்கன்

இதயத்தையே

மெழுகாய் ஆக்கி அழிக்கிறான்




கண்கள் என்னைத் தின்னுமே

கதறுகிறேன்

குழந்தையாய்

கமலமுகக் கவர்ச்சியிலே

கண்கள் குளமாகுதே


கரங்கள் தன்னில் வில்லும்

அம்பும்

காலமெலாம்

மயக்குமே

இடை தனிலே மரவுரியே

ஐயோ என்னைக்கொல்லுதே


இறுதியாக இணைமலர்கள் இதயத்தையே

ஈர்க்குமே

இப்படி ஒரு அற்புதமா

எப்படிச் சொல்வேனதே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!

news

தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

news

மகா பாரத்தின் மிகப்பெரிய ஆளுமை.. "பீஷ்மர்"!

news

கமலமுகக் கவர்ச்சியிலே கண்கள் குளமாகுதே!

news

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்