- கோ.அறிவுசெல்வி இராஜாராம்
எண்ணமிருக்குது
எழுத்துமிருக்குது
கண்ணும் இருக்குது
கவிதைபிறக்குது
கண்டது போல்
விண்டுரைக்க
மண்டு என்னால்
முடியலையே
எழுதி எழுதி அழிக்கிறேன்
எழுத்தில் அவன்
அடக்கமா
எழில் அரக்கன்
இதயத்தையே
மெழுகாய் ஆக்கி அழிக்கிறான்

குழந்தையாய்
கமலமுகக் கவர்ச்சியிலே
கண்கள் குளமாகுதே
கரங்கள் தன்னில் வில்லும்
அம்பும்
காலமெலாம்
மயக்குமே
இடை தனிலே மரவுரியே
ஐயோ என்னைக்கொல்லுதே
இறுதியாக இணைமலர்கள் இதயத்தையே
ஈர்க்குமே
இப்படி ஒரு அற்புதமா
எப்படிச் சொல்வேனதே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்
எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!
மணாளனின் மாண்புகள்!
Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..
{{comments.comment}}