பெங்களூரு: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான மோசடி வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பெங்களூர் மாநகர முதலாவது தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்.த் கடந்த 2014ம் ஆண்டு கோச்சடையான் என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் மீடியா ஒன் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் ஒன்றாகும். படத் தயாரிப்புச் செலவுகளுக்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் மீடியா ஒன் நிறுவனம் ரூ. 6.2 கோடி கடன் வாங்கியிருந்தது.
இந்தக் கடன் தொகைக்கான உத்தரவாதத்தில் லதா ரஜினிகாந்த்தும் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் வாங்கிய கடனை மீடியா ஒன் நிறுவனம் திருப்பித் தரவில்லை. இதையடுத்து மீடியா ஒன் நிறுவனத்தின் முரளி மற்றும் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டிருந்த லதா ரஜினிகாந்த் ஆகிய இருவர் மீதும் பெங்களூரு ஹலசூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஆட் பீரோ நிறுவனம் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் லதா ரஜினிகாந்த், முரளி மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று லதா ரஜினிகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது ஜாமீன் வழங்கக் கோரி அவர் சார்பில் மனு செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த் கரிம்மன்னவர், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். பின்னர் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}