வங்கி மோசடி விவகாரம்.. ஜெட் ஏர்வேஸ் ஓனர் நரேஷ் கோயல் கைது

Sep 02, 2023,09:46 AM IST

டில்லி : வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரைண நடைபெற்று வருகிறது.

கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மே மாதம் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. 2011 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை ஏர்வேஸ் நிறுவனத்துக்கான ஆலோசனை சேனைகளுக்கு என்று ரூ.1152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.420 கோடி ஜெட் ஏர்வேசுடன் கொஞ்சமும் தொடர்பில்லாத வேறு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தலையிட்ட அமலாக்கத்துறை நரேஷ் கோயல், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பாக இன்று நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து கனரா வங்கியில் ரூ.538 கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்து, அழைத்துச் சென்றுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரைண நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

news

"எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; தயாராக இருங்கள்" – மு.க.ஸ்டாலின் சொன்னதன் அர்த்தம்

news

வாய் திறந்து பேசாமல் கடந்து போறே!

news

காதலன் கவிதை எழுதினால்

அதிகம் பார்க்கும் செய்திகள்