வங்கி மோசடி விவகாரம்.. ஜெட் ஏர்வேஸ் ஓனர் நரேஷ் கோயல் கைது

Sep 02, 2023,09:46 AM IST

டில்லி : வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரைண நடைபெற்று வருகிறது.

கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மே மாதம் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. 2011 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை ஏர்வேஸ் நிறுவனத்துக்கான ஆலோசனை சேனைகளுக்கு என்று ரூ.1152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.420 கோடி ஜெட் ஏர்வேசுடன் கொஞ்சமும் தொடர்பில்லாத வேறு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தலையிட்ட அமலாக்கத்துறை நரேஷ் கோயல், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பாக இன்று நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து கனரா வங்கியில் ரூ.538 கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்து, அழைத்துச் சென்றுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரைண நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்