இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

Jan 06, 2026,05:08 PM IST

சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் தீர்ப்பை கொண்டாடும் வகையில் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.


அதில், திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் தான். அந்த தீபத் தூண் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. அதனால் அங்கு தீபம் ஏற்றலாம். இதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலை மீது ஒரே ஒரு நாள் தீபம் ஏற்றுவதால் பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என தமிழக அரசு கூறுவது அபத்தமானது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.




மதுரை ஐகோர்ட் கிளையின் இந்த தீர்ப்பை பாஜக.,வினரும், இந்து சமய அமைப்பினரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பாக தேங்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்பதை மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பினை உளமார வரவேற்கிறேன்.தமிழ்ப் பண்பாட்டை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தை நடத்தி தமிழர்களாகிய நாம் வெற்றி கண்டுள்ளோம். ஆளும் அரசு ஆயிரம் அடக்குமுறைகளை ஏவினாலும் கொஞ்சம் கூட மனம் துவளாமல் இப்போராட்டத்தை முன்னெடுத்த முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழர்களின் தீபமேற்றும் உரிமையை மீட்டெடுத்ததைக் கொண்டாடும் விதமாக, இன்று மாலை 6 மணிக்கு அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து. "வெற்றிவேல்! வீரவேல்!” என மாக்கோலமிட வேண்டுமென உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்