செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 28ல் தீர்ப்பு...சென்னை கோர்ட் அறிவிப்பு

Mar 22, 2024,04:32 PM IST
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது மார்ச் 28ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போதே செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 



இந்நிலையில் பல முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் தனது அமைச்சர் பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

இத்தனை செய்தும் கூட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன்  கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நேற்று அவர் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.  அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சிறைக் காவலை மார்ச் 22ம் தேதி (இன்று) வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  இதன் மூலம்  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இன்று செந்தில் பாலாஜி வழக்கு  சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். அல்லி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது மார்ச் 28ல் தீர்ப்பு வழங்கப்படும்  என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

news

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!

news

புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!

news

சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை

news

மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!

news

பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா

அதிகம் பார்க்கும் செய்திகள்