- சுமதி சிவக்குமார்
குழந்தை எனும் போதே மனம் குதூகலம் கொண்டு ஆடுகிறது. காரணம் அதன் சிரிப்பு.. கள்ளங்கபடம் இல்லாத கடலளவு சிரிப்பு. கவிழ்ந்து படுத்து கழுத்தை தூக்கி காலை நீட்டி ஆடும் பரதம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஈருயிர் இணைந்து ஓருயிர் கருவாகி காரிருள் அறையிலே பேரருள் கருணையாலே கருவே சதைப்பிண்டமாய் உருமாறி வளர்ந்து கைகால் முளைத்து மைபோல் இழைத்து சிரம் குனிந்து கரம் மடக்கி வட்டக் கருவறையோ வளர்ந்து அரைவட்ட கருவறையாகி இருபுறமும் உதைவாங்கி இரவென்றும் பகலென்றும் பாராமல் தலைமுட்டி தந்த துன்பங்கள் மறைந்தனவே.

ஏனெனில் ஈரைந்து மாதங்கள் முடியமுன் ஈன்றெடுத்தாள் ஒரு அழகிய குழந்தையை. அதன் முகம் கண்டு அகம் நிறைந்த மகிழ்ச்சியில் தான் பட்ட வலிகள் அத்தனையும் மறந்தாள். சுவடுகள் கூடத் தெரியாமல் காணாமல் போனது அதிசயமே. அவள் தான் தாய்.
இது குழந்தைக்கான கட்டுரையாச்சே இந்தம்மா அது பாட்டுக்கு தாயைப் பற்றி எழுதியிருக்கு என எண்ண வேண்டாம். தாயையைும் பாடலாம்.. போற்றலாம்.. கொண்டாடலாம்.. ஏனெனில் அவளும் ஒர் அழகிய குழந்தையாய் பிறந்தவள் தானே.
(சின்னசேலம் சுமதி சிவக்குமார் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}