பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்

Feb 01, 2026,01:45 PM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு:


10% ஆக உள்ள முதலீடு வரம்பு 24 % ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளில் அதிகரிக்க புதிய திட்டங்கள்.


மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க புதிய திட்டங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் 7 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.




புதிய சரக்கு வழித்தடங்கள்: கிழக்கே தான்குனி  முதல் மேற்கே சூரத்  வரை இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு இரயில் வழித்தடங்களை  உருவாக்குதல்.


நீர்வழிப்பாதைகள்: அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப்பாதைகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல். இதில் முதற்கட்டமாக, ஒடிசாவின் தால்சர்  மற்றும் அங்குல்  போன்ற தாதுக்கள் நிறைந்த பகுதிகளையும், கலிங்காநகர்  போன்ற தொழில் மையங்களையும், பாரதீப்  மற்றும் தாம்ரா  துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிப்பாதை 5 தொடங்கப்படும்.


கப்பல் பழுதுபார்க்கும் தளம்: உள்நாட்டு நீர்வழிப்பாதைகளுக்குப் பயன்படும் வகையில், வாரணாசி மற்றும் பாட்னாவில் கப்பல் பழுதுபார்க்கும் கட்டமைப்பு வசதிகள்   ஏற்படுத்தப்படும்.


கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்கள் மேம்பாட்டுத் திட்டம்:


உயர்மதிப்பு கொண்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்காக, ஒரு புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


இந்தத் திட்டம் தீயணைப்பு உபகரணங்கள் முதல் மின் தூக்கிகள் மற்றும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் (Tunnel வரை பல்வேறு வகையான உபகரணங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.


பழவேற்காடு ஏரியில் சுற்றுலா


பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்


தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம். இந்திய முந்திரிகளை உலக சந்தைமயமாக்க திட்டம். கால்நடை மருத்துவமனைகளை நிறுவ புதிய கடன் திட்டம் உருவாக்கப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து சந்தன மர வளர்ப்பு திட்டம்


கலாச்சார சுற்றுலா மையங்கள்


கலாச்சார, ஆன்மீக, பாரம்பரிய சுற்றுலா மையங்கள் நாடெங்கும் உருவாக்கப்படும்.


5 மண்டல மருத்துவ மையங்கள்


தனியார் துறையுடன் இணைந்து 5 மண்டல மருத்துவ மையங்கள் நிறுவப்படும்.விளையாட்டு போட்டிகளை வளர்க்க, திறமைகளை ஊக்குவிக்க, பயிற்சியாளர்களை உருவாக்க திட்டம்.


பெண் தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்


பெண் தொழிலாளர்கள் வளர்ச்சிக்காக புதிய திட்டம் உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தொழில் பயிற்சி வழங்கப்படும்.


ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும். டிடிஎஸ் விகிதம் குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


கோவில் நகரங்களுக்கு முக்கியத்துவம்


2, 3வது நிலை நகரங்கள், கோவில் நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.


மாநில வரி பகிர்வில் மாற்றமில்லை


16வது நிதிக்குழு ஏற்கப்படுகிறது. நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுகு்கான வரி பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை. 42% என்ற அளவிலேயே தொடரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

அதிகம் பார்க்கும் செய்திகள்