டில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார்.
கேரளாவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தனர். இதனால் கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைரசால் ஏற்பட்ட மரணம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தலையிட்டு விசாரித்து வந்தது.

இது பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாண்டவியா, கேரளாவில் மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. நிபா வைரஸ் மேலாண்மை தொடர்பாக மாநில அரசுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார். நிபா வைரசிற்கு முதல் நபர் ஆகஸ்ட் 30 ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயனும் கேட்டுக் கொண்டுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}