கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ் : பலி 2 ஆனது

Sep 13, 2023,12:13 PM IST

டில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார்.


கேரளாவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தனர். இதனால் கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைரசால் ஏற்பட்ட மரணம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தலையிட்டு விசாரித்து வந்தது. 




இது பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாண்டவியா, கேரளாவில் மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. நிபா வைரஸ் மேலாண்மை தொடர்பாக மாநில அரசுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார். நிபா வைரசிற்கு முதல் நபர் ஆகஸ்ட் 30 ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார். 


இதனையடுத்து கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயனும் கேட்டுக் கொண்டுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!

news

பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!

news

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்