டில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார்.
கேரளாவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தனர். இதனால் கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைரசால் ஏற்பட்ட மரணம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தலையிட்டு விசாரித்து வந்தது.

இது பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாண்டவியா, கேரளாவில் மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. நிபா வைரஸ் மேலாண்மை தொடர்பாக மாநில அரசுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார். நிபா வைரசிற்கு முதல் நபர் ஆகஸ்ட் 30 ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயனும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}