டில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார்.
கேரளாவில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தனர். இதனால் கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைரசால் ஏற்பட்ட மரணம் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தலையிட்டு விசாரித்து வந்தது.

இது பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாண்டவியா, கேரளாவில் மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. நிபா வைரஸ் மேலாண்மை தொடர்பாக மாநில அரசுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார். நிபா வைரசிற்கு முதல் நபர் ஆகஸ்ட் 30 ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயனும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}