சில்லென்ற பனியில் நனைந்த சென்னை மாநகரம்.. மினி ஊட்டி போல இருக்குங்கோ.. செம கூல்!

Jan 03, 2024,10:59 AM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவில்  பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வாகனங்கள் அதிகாலை வெயில் வரும் வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்று கொண்டிருந்தன. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள் என மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்படுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று இருக்கக்கூடிய நிலையில், சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது .இதனால் இன்று காலை நான்கு மணியிலிருந்து தற்போது வரை பனியின் தாக்கம் குறையவில்லை. தற்போது உதகையிலும் உறைபனி நிலவுகிறது.



சென்னையை பொறுத்தளவில், அதிக பனிப்பொழிவு நிலவுவதால் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்