சில்லென்ற பனியில் நனைந்த சென்னை மாநகரம்.. மினி ஊட்டி போல இருக்குங்கோ.. செம கூல்!

Jan 03, 2024,10:59 AM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவில்  பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வாகனங்கள் அதிகாலை வெயில் வரும் வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்று கொண்டிருந்தன. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள் என மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்படுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று இருக்கக்கூடிய நிலையில், சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது .இதனால் இன்று காலை நான்கு மணியிலிருந்து தற்போது வரை பனியின் தாக்கம் குறையவில்லை. தற்போது உதகையிலும் உறைபனி நிலவுகிறது.



சென்னையை பொறுத்தளவில், அதிக பனிப்பொழிவு நிலவுவதால் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

news

வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

news

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்