சில்லென்ற பனியில் நனைந்த சென்னை மாநகரம்.. மினி ஊட்டி போல இருக்குங்கோ.. செம கூல்!

Jan 03, 2024,10:59 AM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவில்  பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வாகனங்கள் அதிகாலை வெயில் வரும் வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்று கொண்டிருந்தன. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள் என மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்படுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று இருக்கக்கூடிய நிலையில், சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது .இதனால் இன்று காலை நான்கு மணியிலிருந்து தற்போது வரை பனியின் தாக்கம் குறையவில்லை. தற்போது உதகையிலும் உறைபனி நிலவுகிறது.



சென்னையை பொறுத்தளவில், அதிக பனிப்பொழிவு நிலவுவதால் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்