சில்லென்ற பனியில் நனைந்த சென்னை மாநகரம்.. மினி ஊட்டி போல இருக்குங்கோ.. செம கூல்!

Jan 03, 2024,10:59 AM IST
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவில்  பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வாகனங்கள் அதிகாலை வெயில் வரும் வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்று கொண்டிருந்தன. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள் என மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்படுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று இருக்கக்கூடிய நிலையில், சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் பனிப்பொழிவு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாதம் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது .இதனால் இன்று காலை நான்கு மணியிலிருந்து தற்போது வரை பனியின் தாக்கம் குறையவில்லை. தற்போது உதகையிலும் உறைபனி நிலவுகிறது.



சென்னையை பொறுத்தளவில், அதிக பனிப்பொழிவு நிலவுவதால் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்