சென்னை: மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு ஒரு புதிய கெளரவத்தை அளித்துள்ளது சென்னை கமலா தியேட்டர்.
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் நினைவாக, நாயகன் படத்தின் மறுவெளியீட்டின் முதல் டிக்கெட் அவருக்கு ஒதுக்கப்படும் என சென்னை கமலா தியேட்டர் அறிவித்துள்ளது. நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது கமல்ஹாசன் நடித்த நாயகன் படம்.
எப்போதுமே கமலா தியேட்டரில் கமல் படங்கள் வெளியானால், முதல் காட்சியை ரோபோ சங்கர் எப்போதும் முதல் ஆளாக வந்து கொண்டாடுவார். தீவிர கமல் ரசிகரும் கூட. இதனால்தான் அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்கு கமலா தியேட்டர் நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

கமலா தியேட்டரின் இயக்குநர் தனது X பக்கத்தில், "ரோபோ சங்கர் இல்லாமல் கமல்ஹாசனின் படங்களின் கொண்டாட்டங்கள் இனி ஒருபோதும் ஒன்றாக இருக்காது. பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன், முதல் டிக்கெட் ரோபோ சங்கரின் நினைவாகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரது குடும்பத்தினருக்காகவும் ஒதுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 18 அன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், 46 வயதில் காலமானார். அவருக்கு மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா மற்றும் ஒரு பேரன் உள்ளனர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று மரியாதை செலுத்தியிருந்தார். மேலும் அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ரோபோ சங்கர். ரோபோ என்பது உங்கள் புனைப்பெயர், ஆனால் என் அகராதியில் நீங்கள் ஒரு மனிதர். அதனால்தான் நீங்கள் என் இளைய சகோதரன். உங்கள் மறைவு நம்மைப் பிரிக்குமா? உங்கள் நேரம் வந்துவிட்டது, அதனால் நீங்கள் சென்றீர்கள். ஆனால் என் நேரம் வரவில்லை, அதனால் நான் இருக்கிறேன். நாளை நமக்கே உரியது, ஏனென்றால் நீங்கள் நாளை நமக்காக விட்டுச் சென்றீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
நாயகன் திரைப்படம், கமல்ஹாசன், ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம். இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிப்பு, இசை, இயக்கம், கேமரா என பல்வேறு காரணங்களுக்காக இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இது பெற்றுக் கொடுத்தது நினைவிருக்கலாம்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}