சென்னை: மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு ஒரு புதிய கெளரவத்தை அளித்துள்ளது சென்னை கமலா தியேட்டர்.
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் நினைவாக, நாயகன் படத்தின் மறுவெளியீட்டின் முதல் டிக்கெட் அவருக்கு ஒதுக்கப்படும் என சென்னை கமலா தியேட்டர் அறிவித்துள்ளது. நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது கமல்ஹாசன் நடித்த நாயகன் படம்.
எப்போதுமே கமலா தியேட்டரில் கமல் படங்கள் வெளியானால், முதல் காட்சியை ரோபோ சங்கர் எப்போதும் முதல் ஆளாக வந்து கொண்டாடுவார். தீவிர கமல் ரசிகரும் கூட. இதனால்தான் அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்கு கமலா தியேட்டர் நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

கமலா தியேட்டரின் இயக்குநர் தனது X பக்கத்தில், "ரோபோ சங்கர் இல்லாமல் கமல்ஹாசனின் படங்களின் கொண்டாட்டங்கள் இனி ஒருபோதும் ஒன்றாக இருக்காது. பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன், முதல் டிக்கெட் ரோபோ சங்கரின் நினைவாகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரது குடும்பத்தினருக்காகவும் ஒதுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 18 அன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், 46 வயதில் காலமானார். அவருக்கு மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா மற்றும் ஒரு பேரன் உள்ளனர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று மரியாதை செலுத்தியிருந்தார். மேலும் அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ரோபோ சங்கர். ரோபோ என்பது உங்கள் புனைப்பெயர், ஆனால் என் அகராதியில் நீங்கள் ஒரு மனிதர். அதனால்தான் நீங்கள் என் இளைய சகோதரன். உங்கள் மறைவு நம்மைப் பிரிக்குமா? உங்கள் நேரம் வந்துவிட்டது, அதனால் நீங்கள் சென்றீர்கள். ஆனால் என் நேரம் வரவில்லை, அதனால் நான் இருக்கிறேன். நாளை நமக்கே உரியது, ஏனென்றால் நீங்கள் நாளை நமக்காக விட்டுச் சென்றீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
நாயகன் திரைப்படம், கமல்ஹாசன், ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம். இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிப்பு, இசை, இயக்கம், கேமரா என பல்வேறு காரணங்களுக்காக இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இது பெற்றுக் கொடுத்தது நினைவிருக்கலாம்.
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}