பிரமாண்டமாக உருவாகும் டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டடங்கள்.. அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

Jul 26, 2024,03:22 PM IST

சென்னை:   டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.


டெல்லி சாணக்யாபுரியில் உள்ள வைகை இல்ல வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அடிக்கல் நாட்டு விழாவில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான புத்தங்களையும் முதல்வர் வெளியிட்டார். இதுக்குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: 


முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று 26/07/2024 தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 18/06/2021 அன்று முதலமைச்சர் தலை மையில் புது டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புது டெல்லியில் மிகத் தீவிர நில அதிர்வு மண்டலம் நான்காக மறு வகைப்படுத்தப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார்.




அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன. புதிதாக கட்டப்பட உள்ள இக்கட்டிடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய துறை நுட்பக் கழகம், சென்னை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறையால்  புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தை மறு சீரமைத்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு ரூபாய் 257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


சாணயக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்திற்கான மறு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களின் விவரங்கள் இப்புதிய கட்டிடம் மிக முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்பு தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கட்டிடம் மூன்று அடித்தளம், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களை கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சத்து சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது.


மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை,39 முக்கிய பிரமுகர் அறைகள், 60 உயர்தர அறைகள், 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், மூன்று உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளும் இப்புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர்.எ.வ. வேலு, தலைமைச் செயலாளர்.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.மங்கத் ராம் சர்மா பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொளி காட்சி வாயிலாக புது டெல்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர். ராசா, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சு.வெங்கடேசன், துரை வைகோ, வை. செல்வராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்