பாடகி பி.சுசிலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது.. வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Oct 04, 2024,04:42 PM IST

சென்னை:   பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளார்.


தமிழக திரை உலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களை போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் பெயரில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மாதம் மூன்றாம் நாள் அன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருந்தாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவு பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 




இந்த அறிவிப்பினை செயல்படுத்துகின்ற வகையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில், விருந்தாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டது. 


கடந்த 2022 ஆம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத்துறையில் தடம் பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆருர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் முதுமை காரணமாக ஓய்வில் இருக்கும் ஆரூர்தாசின் இல்லத்திற்கே நேரில் சென்று 3.6.2022 அன்று இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார். 


அதோடு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப்  பெண்மையை போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரை கலைஞருக்கு இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.7.2024 அன்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் கலைஞரால் பாராட்டப்பட்டவரும் ஆன கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25000க்கு மேற்பட்ட பலமொழி பாடல்களை பாடியவரும் தென்னிந்தியாவின் இசைக் குயில் என்றும், மெல்லிசை அரிசி என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்டவரும் மான திரைப்பட பாடகி பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு  கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது என்று  கடந்த மாதம் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.


இந்த அறிக்கையின் படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி கெளரவித்தார். கலைத்துறை வித்தகர் விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

தாய்!!!

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்