ரூ.9000 கோடியில் டாடா தொழிற்சாலை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Feb 09, 2026,12:36 PM IST

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (பிப்ரவரி 9, 2026) திறந்து வைத்தார்.


தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


இந்தத் தொழிற்சாலை சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் முதன்முறையாக ஜாகுவார் (Jaguar) மற்றும் லேண்ட் ரோவர் (Land Rover) போன்ற உலகத்தரம் வாய்ந்த சொகுசு கார்கள் இந்த ஆலையில் முழுமையாகத் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஆலை 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்சாலையைத் திறந்து வைத்த பின்னர், ஆலை வளாகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை ஓட்டிப் பார்த்தார். அவருடன் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.


கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே (சுமார் 16 மாதங்களில்) கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறை உலக வரைபடத்தில் மீண்டும் ஒருமுறை தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்