ரூ.9000 கோடியில் டாடா தொழிற்சாலை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Feb 09, 2026,12:36 PM IST

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (பிப்ரவரி 9, 2026) திறந்து வைத்தார்.


தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


இந்தத் தொழிற்சாலை சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் முதன்முறையாக ஜாகுவார் (Jaguar) மற்றும் லேண்ட் ரோவர் (Land Rover) போன்ற உலகத்தரம் வாய்ந்த சொகுசு கார்கள் இந்த ஆலையில் முழுமையாகத் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஆலை 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்சாலையைத் திறந்து வைத்த பின்னர், ஆலை வளாகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை ஓட்டிப் பார்த்தார். அவருடன் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.


கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே (சுமார் 16 மாதங்களில்) கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறை உலக வரைபடத்தில் மீண்டும் ஒருமுறை தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்

news

ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!

news

Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!

news

CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!

news

போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்