12 ஹெலிகாப்டர்கள் ரெடி.. "எம்எல்ஏ"க்களை பாதுகாக்கும் கர்நாடக காங்.. கூவத்தூர் வருவார்களா?

May 13, 2023,11:46 AM IST

டெல்லி:  கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளபோதிலும் கூட பாஜகவும் 70 இடங்களுக்கு மேல் வெல்கிறது. இதனால் கட்சி தாவல் நடவடிக்கைகள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது போன்றவற்றுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக இதைத்தான் செய்தது. மகாராஷ்டிராவிலும் அப்படித்தான் சிவசேனாவைக் காலி செய்தது. ஏன் கர்நாடகத்திலும் கூட பாஜக அரசு உருவானதே இப்படித்தான். எனவே இந்த முறையும் குதிரை பேரம் நடக்க வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் அஞ்சுகிறது.



இதனால் வெற்றி பெறும் தனது வேட்பாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. வெற்றி பெறுவோர் உடனடியாக பெங்களூருக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். அவர்களை பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட் அதில் ஒன்று. மேலும் 2 ஹோட்டல்களையும் காங்கிரஸ் முடிவு செய்து வைத்துள்ளதாம்.

அதேபோல தமிழ்நாட்டிலும் பாதுகாப்பான முறையில் தனது வேட்பாளர்களைத் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு இங்கும் பேசி வருகிறது. ஒரு எம்எல்ஏவைக் கூட பறி கொடுத்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மிகவும் கவனமாக உள்ளதாக தெரிகிறது. பெங்களூரில் 12 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வருகிறது. அதன் மூலம் வேட்பாளர்களை பத்திரமான இடங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாம்.

கூவத்தூர் வருவார்களா

ஒருவேளை தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டால் எங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அவர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுதான் தமிழ்நாட்டிலேயே மிகவும் ராசியான ரிசார்ட்டாகும். அங்குதான் சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சில நாட்கள் முகாமிட்டிருந்தார்.

அங்கு தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமிதான் பின்னர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய வரலாறு படைத்தார் என்பதை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. எனவே அந்த ராசிக்காக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடும் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்