பள்ளி திறக்கப்பட்ட அன்றே மாணவர்களுக்கு நோட் புத்தகம் வழங்க.. அமைச்சர் அன்பில் மகேஷ்‌ அறிவுறுத்தல்!

May 27, 2025,06:01 PM IST

சென்னை: பள்ளி திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை  வழங்கி உள்ளார்.



2025-26ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில்  கோடை விடுமுறை நீட்டிக்கப்படாது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் திட்டமிட்டபடியே தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்படும் என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.


அதே சமயத்தில்  பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை செய்திருப்பதை உறுதி செய்தல், மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள், போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து  காணொளி வாயிலாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர்கள்,துறை சார்ந்த இயக்குனர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்துரையாடி, சில ஆலோசனைகளை வழங்கினார்.அதில், 


பள்ளிகள் திறக்கப்பட்ட ஜூன் இரண்டாம் தேதி அன்றே மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப்பை, உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். 




கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளதா..?என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 


தேவைப்பட்டால் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும். 


இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். 


மாணவர்களின் பாதுகாப்பை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். 


தனியார் பள்ளிகளில் கட்டணம்  செலுத்த முடியாத சிலர், கல்வி சான்றிதழை வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளி நிறுவனங்களுடன் பேசி மாணவர்களின் கல்வி சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்

news

அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி

news

Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!

news

அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?

news

GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி

news

GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி

news

40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!

news

இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு

news

விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்