சென்னை: டிடி அதாவது தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.. 90ஸ் கிட்ஸுக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய டிடி பொதிகை தற்போது டிடி தமிழ் ஆக பெயர் மாறியுள்ளது + கலரும் மாறியுள்ளது.
டிடி பொதிகையின் பல நிகழ்ச்சிகள் டிரென்ட் செட்டராக அமைந்தன. இன்றைக்கு பாடாய்ப்படுத்தி வரும் மெகா சீரியல்களின் துயரத்தை அனுபவித்தவர்களுக்கு அன்றைய டிடி பொதிகை பெரிய சொர்க்கமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை நாடகத்தையெல்லாம் மறக்க முடியுமா..வாரம் ஒரு நாள் மட்டும் சினிமாப் பாடல்களை ஒளிபரப்பும் அந்த ஒளியும் ஒலியும் மறக்க முடியுமா.. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகாலாம். தற்போது அந்த டிடியின் பெயர் மாறியுள்ளது.
டிடி பொதிகை சானலின் பெயர் மாறியிருப்பது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியை புதுப்பொலிவுடன் டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்கி வைத்த
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொலைக்காட்சிகளின் முன்னோடியான தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உழவுக்கு உயிரூட்டிய "வயலும் வாழ்வும்" கல்விக்கு வழிகாட்டிய
"காண்போம் கற்போம்" மங்கையரைப் போற்றிய "மங்கையர் சோலை", நான் பங்கேற்று பல மாதங்கள் நடத்திய "மகளிர் பஞ்சாயத்து" மற்றும் "மருத்துவ விழிப்புணர்வு" நிகழ்ச்சிகள் இன்றளவும் என் மனதில் நிழலாடுகிறது.
இதுபோன்ற தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி
டிடி தமிழ் என்ற பெயரில் மீண்டும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஆரம்பித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
டிடிதமிழ் என்ற பெயர் மாற்றத்தை வரவேற்கிறோம்..... வாழ்க... வளர்க... வெல்க என்று டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}