படோடி கோப்பையைக் கைவிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.. விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

Jun 14, 2025,02:44 PM IST
மும்பை: இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர்கள் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் அந்தப் பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கை விட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்கவிருக்கும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர்,  டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது.  முன்னதாக, 2007 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வந்த இந்தியா - இங்கிலாந்து இருதரப்பு தொடர்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தன. இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 75 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், 2007 ஆம் ஆண்டில் முதன்முதலில் பட்டோடி கோப்பை வழங்கப்பட்டது. 

அதேபோல இந்தியாவில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்,  முன்னாள் கேப்டன் ஆண்டனி டி மெல்லோ பெயரிலான கோப்பையாக அழைக்கப்படுகிறது.



இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு இந்தியாவில் அதிருப்தியை கிளப்பியுள்ளது. குறிப்பாக பிசிசிஐக்கு இது பிடிக்கவில்லை. இருப்பினும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவில் தலையிட முடியாது என்பதால், போட்டிக்குப் பிந்தைய கோப்பைகளில் ஒன்றிற்கு பட்டோடி பெயரைச் சூட்டுமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தை (ECB) பிசிசிஐ கோரியுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தங்கள் தொடருக்கு யாருடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்பதை ECB தான் தீர்மானிக்கிறது. இது அவர்களின் சொந்த தொடர் என்பதால் இதில் பிசிசிஐக்கு எந்தப் பங்கும் இல்லை. போட்டிக்குப் பிந்தைய கோப்பைகளில் ஒன்றிற்கு பட்டோடி பெயரைச் சூட்டுமாறு நாங்கள் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், அவர்கள் எங்களுக்குப் பதிலளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மன்சூர் அலி கான் பட்டோடி, நுரையீரல் தொற்றுடன் போராடி 2011 ஆம் ஆண்டு டெல்லியில் காலமானார். சிறந்த இந்திய கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் பட்டோடி, நாட்டிற்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 34.91 சராசரியுடன் 2793 ரன்கள் குவித்தார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 203 ரன்கள். ஆறு சதங்களையும் 16 அரைசதங்களையும் அடித்துள்ளார் பட்டோடி. அவரது தந்தை இஃப்திகார் அலி கான் பட்டோடி இதற்கு முன்பு இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

ஒரு கோப்பையை ஓய்வுபெறச் செய்வது கிரிக்கெட்டில் இதற்கு முன்பும் கூட நடந்துள்ளது. இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே விளையாடப்பட்ட விஸ்டன் கோப்பை, ரிச்சர்ட்ஸ்-போத்தம் கோப்பை என மறுபெயரிடப்பட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 1989 மற்றும் 2013 க்கு இடையில் விளையாடிய 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களுடன் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 போட்டிகளில் 704 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் ஆல்-டைம் முன்னணி பவுலராக இருக்கிறார். டெண்டுல்கர் 2013 இல் ஓய்வு பெற்றார், ஆண்டர்சன் 2024 இல் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார்.

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், பட்டோடி கோப்பையை 'ஓய்வுபெறச்' செய்யும் ECB இன் முடிவை கடுமையாக சாடினார்.

"இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பட்டோடி கோப்பையை ECB ஓய்வுபெறப் போகிறது என்ற சமீபத்திய செய்தி உண்மையில் கவலை அளிக்கிறது. தனிப்பட்ட வீரர்களின் பெயரிடப்பட்ட ஒரு கோப்பை ஓய்வுபெறுகிறது என்று கேள்விப்படுவது இதுவே முதல் முறை, இருப்பினும் இந்த முடிவு முழுமையாக ECB உடையது, மேலும் பிசிசிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். இது இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கிரிக்கெட்டிற்கு பட்டோடி குடும்பத்தினர் அளித்த பங்களிப்புக்கு ஒரு முழுமையான உணர்வின்மையைக் காட்டுகிறது," என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்