பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

Jul 10, 2025,04:03 PM IST

ஹைதராபாத்: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, நடிகர் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தெலுங்குப் பட பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை (ED) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. 


இந்த வழக்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த பல சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் யூடியூபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ஐந்து முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.




Junglee Rummy, JeetWin, மற்றும் Lotus365 போன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளைப் பிரபலப்படுத்தியதற்காக இந்தக் பிரபலங்கள் பெருமளவிலான விளம்பரக் கட்டணங்களைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தளங்கள் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் மூலம் கோடிக்கணக்கான சட்டவிரோத வருவாயை ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இந்தச் செயலிகள் பயனர்களை ஏமாற்றியதாகவும், பந்தய விதிமுறைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரபலங்கள் இவற்றுக்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.


அமலாக்கத்துறையால் பெயரிடப்பட்ட 29 பிரபலங்களில் நடிகைகள் மஞ்சு லக்ஷ்மி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோரும், தொலைக்காட்சி பிரபலம் ஸ்ரீமுகியும் அடங்குவர். சில பிரபலங்கள் இந்தத் தளங்களின் சேவைகளின் துல்லியமான தன்மை குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள நிலையில், வரும் நாட்களில் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிப்ரவரி 22-ம் தேதி முதல்.. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும்.. திமுக அறிவிப்பு

news

பகிரங்க கொலை மிரட்டல் .. தேமுதிக நிர்வாகியை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்