எடப்பாடி பழனிச்சாமி மீட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. பிரதமர் மோடி வருகை காரணமா?

Jan 18, 2024,05:11 PM IST
சென்னை: தமிழ்நாட்டிற்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை நடைபெற இருந்த அதிமு பொதுக்கூட்டம் 
வரும் 31ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கோலாகாலமாக கொண்டாட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை (19.1.24) அதிமுக பொதுக் கூட்டம் வடசென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருந்தது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டதாம்.



இந்நிலையில் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைக்க நாளை சென்னை வரவுள்ளார். இதற்காக தமிழக முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  உஷார்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து மாற்றங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் வருகின்ற 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்