- க. யாஸ்மின் சிராஜூதீன்
முயற்சிகள் தோற்றுப்போகலாம்
அது தற்காலிகமே தவிர நிரந்தரமல்ல.....
முயற்சிகளை விட்டுவிடுவதுமில்லை....
தோல்விகளை நாம்
சந்திக்கலாம் ஆனால்
தோற்றுக்கொண்டே இருப்பதில்லை ......
வெற்றி பெறும் வரை இளைப்பாறுவதுமில்லை...
முயற்சிகளின் சறுக்கிய ஒரு படி தான் தோல்வி
அதனால் விளைந்த கற்றலில் விளைந்தது தான்
வெற்றிப் படிக்கட்டு ....
தோல்வி வெற்றிக்கு பலமான பாலம் அமைத்துக் கொடுக்கும்
என்றும் விழாமல் உறுதிபெற....
தோல்வியைக் கண்டு தளராதே ..
முயற்சி செய்யத் தயங்காதே....

முயற்சி பயிற்சியாகும்
தோல்வி நல்வழிகாட்டியாகும்..
என்பதை மறவாதே.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
நினைவுகளை (நினைக்கும்) நனைக்கும் ஒரு நாள்!
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
நீரும் வாழ்வும்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
முயற்சியும் தோல்வியும்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
ஆட்டிசம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
{{comments.comment}}