டில்லி : தமிழ்நாடு, கேரளா, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2026
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 30
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - ஏப்ரல் 6
வேட்பு மனுக்கள் பரிசீலனை - ஏப்ரல் 7
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை - மே 4
தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள நடப்பு சட்டசபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். அதற்கு பிறகு இந்த மாநிலங்களில் அரசு தொடர்பான எந்த ஒரு முடிவுகளை எடுப்பதற்கும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகி விடும்.
யார் யாருக்கு எப்போது எத்தனை கட்டமாக சட்டசபை தேர்தல்?
மேற்கு வங்காளம் - 2 கட்டங்களாக தேர்தல் (ஏப்ரல் 23 மற்றும் 29)
தமிழ்நாடு - ஏப்ரல் 23
கேரளா - ஏப்ரல் 9
அசாம் - ஏப்ரல் 9
புதுச்சேரி - ஏப்ரல் 9
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}