டெல்லி: தேர்தல் பாண்டுகள் என்ற பெயரில் இந்தியாவின் அத்தனை கட்சிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் பாய்ந்துள்ள விவரம் மக்களை அதிர வைத்துள்ளது. மொத்தம் ரூ. 12769 கோடியே 08 லட்சத்து 93 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது, பெறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோருக்காக தேர்தல் பாண்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் இந்த பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 1 கோடி என்ற அளவீடுகளில் (denomination) இந்த பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
பாஜக டாப் - ரூ. 6,061 கோடி

இதில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது, யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாஜகதான் பெருமளவிலான பணத்தைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 47.46 சதவீத அளவுக்கு பாஜகவுக்குத்தான் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக அளவாக பாஜகவுக்கு 6061 கோடி ரூபாய் தேர்தல் பாண்டுகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் - ரூ. 1422 கோடி
தேர்தல் பாண்டுகள் மூலம் அதிக பணம் பெற்ற 2வது பெரிய கட்சி திரினமூல் காங்கிரஸ் கட்சி. அக்கட்சிக்கு ரூ. 1610 கோடி அளவுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி - ரூ. 1422 கோடி, பாரத் ராஷ்டிர சமிதி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) - ரூ. 1215 கோடி, பிஜூ ஜனதாதளம் ரூ. 776 கோடி பெற்றுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 219 கோடி, சிவசேனா கட்சிக்கு ரூ. 158 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக ரூ. 639 கோடி - அதிமுக ரூ. 6 கோடி
ஆம் ஆத்மி கட்சிக்கும் தேர்தல் பாண்டுகள் மூலம் பணம் கிடைத்துள்ளது. அதாவது 65 கோடியை அக்கட்சி பெற்றுள்ளது. இந்த லிஸ்ட்டில் அதிமுக பின்னாடிதான் உள்ளது. அக்கட்சிக்கு ரூ. 6 கோடி பணம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவுக்கு மட்டுமே தேர்தல் பாண்டுகள் மூலம் பணம் கிடைத்துள்ளதாக இந்தப் பட்டியல் கூறுகிறது. திமுகவுக்கு ரூ. 639 கோடி பணம் தேர்தல் பாண்டுகள் மூலம் கிடைத்துள்ளது.
லாட்டரி மார்ட்டின் கொடுத்தது ரூ. 1368 கோடி

பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸஸ் நிறுவனம்தான். அதாவது இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ரூ. 1368 கோடியைக் கொடுத்துள்ளது. இதுதான் டாப்பில் இருக்கிறது.
அடுத்து மெகா என்ஜீனியரிங் நிறுவனம் ரூ. 821 கோடியைக் கொடுத்துள்ளது. ஹால்டியா எனர்ஜி நிறுவனம் ரூ. 377 கோடி, வேதாந்தா நிறுவனம் (ஸடெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம்) - ரூ. 376 கோடி, குவிக்சப்ளை செயின் நிறுவனம் ரூ. 410 கோடி கொடுத்துள்ளன.
கட்சிகளுக்கு நிதியுதவி செய்தவர்களின் பட்டியலில் ஏர் டெல், டிஎல்எப், மதன்லால் லிமிட்டெட், ராம்கோ சிமென்ட்ஸ் உள்பட பல நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}