- வே. ஜெயந்தி
இந்த உலகம் மாயமானது,
எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்!
உள்ளங்கையில் உலகம்
அடக்கம் பெற்ற காலமிது.
ஆமாம்… கைபேசி மயம்
மறைந்ததே அன்பெனும் நேயம்.
வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி,
மனங்களில் மட்டும் ஏக்கம்;
சொல்ல மறந்த கதைகள்
மௌனமாகிப் போனதே.
வாழ்த்துகளும் சோகங்களும்
உணர்வல்ல… செய்திகளாயிற்றே;
கண்ணீர் கூட இப்போது
எமோஜியாக மாறிற்றே.
முகம் பார்த்து பேசும் நேரம்
திரையாக சுருங்கியது,
உள்ளம் தொட்ட உறவுகள்
அலைவரிசையில்
தொலைந்தது.
உலகம் எங்கே செல்கிறதோ?
முன்னேற்றமா தனிமையா?
மனிதம் கைபேசியை
மீண்டும் வெல்லும் நாளே விடையா?
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
GOLD RATE:தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு... வெள்ளி கிராமிற்கு ரூ.4 குறைவு!
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
{{comments.comment}}