- வே. ஜெயந்தி
இந்த உலகம் மாயமானது,
எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்!
உள்ளங்கையில் உலகம்
அடக்கம் பெற்ற காலமிது.
ஆமாம்… கைபேசி மயம்
மறைந்ததே அன்பெனும் நேயம்.
வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி,
மனங்களில் மட்டும் ஏக்கம்;
சொல்ல மறந்த கதைகள்
மௌனமாகிப் போனதே.
வாழ்த்துகளும் சோகங்களும்
உணர்வல்ல… செய்திகளாயிற்றே;
கண்ணீர் கூட இப்போது
எமோஜியாக மாறிற்றே.
முகம் பார்த்து பேசும் நேரம்
திரையாக சுருங்கியது,
உள்ளம் தொட்ட உறவுகள்
அலைவரிசையில்
தொலைந்தது.
உலகம் எங்கே செல்கிறதோ?
முன்னேற்றமா தனிமையா?
மனிதம் கைபேசியை
மீண்டும் வெல்லும் நாளே விடையா?
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}