- வே. ஜெயந்தி
இந்த உலகம் மாயமானது,
எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்!
உள்ளங்கையில் உலகம்
அடக்கம் பெற்ற காலமிது.
ஆமாம்… கைபேசி மயம்
மறைந்ததே அன்பெனும் நேயம்.
வாட்ஸாப்பில் குறுஞ்செய்தி,
மனங்களில் மட்டும் ஏக்கம்;
சொல்ல மறந்த கதைகள்
மௌனமாகிப் போனதே.
வாழ்த்துகளும் சோகங்களும்
உணர்வல்ல… செய்திகளாயிற்றே;
கண்ணீர் கூட இப்போது
எமோஜியாக மாறிற்றே.
முகம் பார்த்து பேசும் நேரம்
திரையாக சுருங்கியது,
உள்ளம் தொட்ட உறவுகள்
அலைவரிசையில்
தொலைந்தது.
உலகம் எங்கே செல்கிறதோ?
முன்னேற்றமா தனிமையா?
மனிதம் கைபேசியை
மீண்டும் வெல்லும் நாளே விடையா?
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}