சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி: 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: மத்திய அரசு அரசாணை!

Feb 26, 2026,06:05 PM IST

புது தில்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் மட்டுமே  எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் பெட்ரோல் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இனி நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20 பெட்ரோல்) மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.


அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் கிடைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். எத்தனால் உற்பத்திக்காக கரும்பு, மக்காச்சோளம் மற்றும் உபரி தானியங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தப் பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.




மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் அந்நியச் செலாவணியில் ஆண்டுக்கு சுமார் ரூ. 30,000 கோடிக்கும் மேல் மிச்சப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் மட்டுமே  எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு (E20 Compliant) வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து கொள்வது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்