டில்லி : இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடரின் 2ஆவது நாளான இன்று, எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கடும் கண்டனம்
தேசியத் தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கூட்டாக தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. இன்றைய அவைத் தலைவர் அமர்வில் அமர்ந்ததும், டெல்லி தடியடி சம்பவம் குறித்து உடனடி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும், இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உரிய விளக்கம் அளிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
அமளியால் முடங்கிய அவை நடவடிக்கைகள்

கூச்சலும் அமளியும் நீடித்ததால், அவைத் தலைவர் உறுப்பினர்களை அமைதி காக்குமாறும், கேள்வி நேரத்தை தடையின்றி நடத்த ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து, அவையின் அமைதியை நிலைநாட்டவும், சுமூகமான சூழலை உருவாக்கவும் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இளைஞர்கள் பலர் கடந்த சில நாட்கள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை தடுக்க இளைஞர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் தாக்குதல் நடத்தினர். போராட்டம் மேலும் பரவாமல் இருக்க டில்லியில் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களும் போராட்டம் நடத்தி, பார்லிமென்ட் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தனர்.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}