சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஏப்ரல், மே காலங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு தனது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். அந்த சமயத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் அதன் இனப்பெருக்கம் தடைபடும். இதனை கருத்தில் கொண்டு தமிழக மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ் மீன்களின் இனத்தை அதிகரிக்க ஏப்ரல்,மே காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற் பகுதிகளில் மீனவர்கள் ஏப்ரல் மே காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு மீன்வளத்துறை.
இதில், தமிழக கிழக்கு கடற்கரைப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களிலும், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. அதாவது மொத்தம் 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் சென்று ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதே சமயத்தில் பாரம்பரிய நாட்டுப் பட படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் மட்டும் ஐந்து மைல் தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மீன் தடைபிடிக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தலா 8000 நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}