சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஏப்ரல், மே காலங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு தனது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். அந்த சமயத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் அதன் இனப்பெருக்கம் தடைபடும். இதனை கருத்தில் கொண்டு தமிழக மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ் மீன்களின் இனத்தை அதிகரிக்க ஏப்ரல்,மே காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற் பகுதிகளில் மீனவர்கள் ஏப்ரல் மே காலங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு மீன்வளத்துறை.

இதில், தமிழக கிழக்கு கடற்கரைப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களிலும், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. அதாவது மொத்தம் 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் சென்று ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதே சமயத்தில் பாரம்பரிய நாட்டுப் பட படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் மட்டும் ஐந்து மைல் தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மீன் தடைபிடிக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தலா 8000 நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}