- க.யாஸ்மின் சிராஜூதீன்
வீதியும் கடலாகும்
மழை நீரும் தேங்கினாலே...
நீருக்கு வழிகாட்ட மறந்தது யாரோ....
பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொறுப்பாளிகளோ....
இது யார் செய்த பிழையோ
மழை நீருக்கு இழைத்த அநீதியோ....
பாதுகாக்கப்பட வேண்டிய அமிர்தம்.....
வீணாகி சேராவதேனோ....

வாகனங்கள் நீச்சலடித்து கடக்க வேண்டிய சூழல்தானே....
வீட்டுச் சுவர்களிலே வண்ணக் கோலமிட்டுச் செல்லும் தூரிகையானதே.......
வீதியில் கடலாட
வாகனங்கள் அதன்மீதாட...
அலைகள் வாசலை
தொட்டு விளையாட....
சுவர்கள் வண்ணமயமாக
உரிமையாளர் கண்டு மனம் நோக.....
என்று தீரும் இந்த நிலையோ
வாக்களிக்கும் போது நாம் செய்த தவறோ.....
சேவை மனம் கொண்ட
உறுப்பினரை தேர்ந்தெடுப்பீரே...
ஊரும் நாடும் சிறக்கச்செய்வீரே... !
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்
அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்
எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!
{{comments.comment}}