வீதியும் கடலாகும்!

Nov 08, 2025,10:52 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


வீதியும் கடலாகும்

மழை நீரும் தேங்கினாலே... 

நீருக்கு வழிகாட்ட மறந்தது யாரோ.... 

பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொறுப்பாளிகளோ.... 

இது யார் செய்த பிழையோ

மழை நீருக்கு இழைத்த அநீதியோ.... 

பாதுகாக்கப்பட  வேண்டிய அமிர்தம்..... 

வீணாகி சேராவதேனோ.... 




வாகனங்கள் நீச்சலடித்து கடக்க வேண்டிய சூழல்தானே.... 

வீட்டுச் சுவர்களிலே வண்ணக் கோலமிட்டுச் செல்லும் தூரிகையானதே....... 

வீதியில் கடலாட 

வாகனங்கள் அதன்மீதாட... 

அலைகள் வாசலை 

தொட்டு விளையாட.... 

சுவர்கள் வண்ணமயமாக

உரிமையாளர் கண்டு மனம் நோக..... 

என்று தீரும் இந்த நிலையோ

வாக்களிக்கும் போது  நாம் செய்த தவறோ..... 

சேவை மனம் கொண்ட

உறுப்பினரை தேர்ந்தெடுப்பீரே... 

ஊரும் நாடும் சிறக்கச்செய்வீரே... !


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்