- க.யாஸ்மின் சிராஜூதீன்
வீதியும் கடலாகும்
மழை நீரும் தேங்கினாலே...
நீருக்கு வழிகாட்ட மறந்தது யாரோ....
பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொறுப்பாளிகளோ....
இது யார் செய்த பிழையோ
மழை நீருக்கு இழைத்த அநீதியோ....
பாதுகாக்கப்பட வேண்டிய அமிர்தம்.....
வீணாகி சேராவதேனோ....

வாகனங்கள் நீச்சலடித்து கடக்க வேண்டிய சூழல்தானே....
வீட்டுச் சுவர்களிலே வண்ணக் கோலமிட்டுச் செல்லும் தூரிகையானதே.......
வீதியில் கடலாட
வாகனங்கள் அதன்மீதாட...
அலைகள் வாசலை
தொட்டு விளையாட....
சுவர்கள் வண்ணமயமாக
உரிமையாளர் கண்டு மனம் நோக.....
என்று தீரும் இந்த நிலையோ
வாக்களிக்கும் போது நாம் செய்த தவறோ.....
சேவை மனம் கொண்ட
உறுப்பினரை தேர்ந்தெடுப்பீரே...
ஊரும் நாடும் சிறக்கச்செய்வீரே... !
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}