க.யாஸ்மின் சிராஜூதீன்
தமிழே அமுதே பைந்தமிழ் மொழியே
அமிழ்தம் எனும் பொருளும் உனக்கே
சங்க இலக்கியங்கள் கூறும் உன்சிறப்பே
கல்வெட்டுகளில் பதிந்த பழமையான மொழியே
திருக்குறளின் வார்த்தையாய்
மிளிரும் உயிர்நாடியே
தமிழின் ஒவ்வொரு எழுத்தும் ஒவியமாய்
மழலைகள் பலகையில் செதுக்கும் காவியமாய்
நாவினில் சுரக்கும் தேனின் சுவையாய்
கொஞ்சும் தமிழில் பிள்ளைமொழியாய்
அகலத்தில் தொடங்கி
சாதனைச்சிகரமாய் உயர்ந்து

மடைதிறந்த வெள்ளமாய் புலவர்களின் நாவில் சரளமாய்
காவியமும் கவிபாடும் சங்கஇலக்கியங்களும்
கதைகூறும்
தாலாட்டிலே கேட்ட அன்னை மொழி
பாட்டியின் கதையிலே ரசித்த
வீரமொழி
உயிரில் கலந்து உணர்வில் வளர்ந்து
செம்மொழியாய் செங்கதிர்
குன்றின் மேலிட்டவிளக்காய்
தமிழே அமுதே மொழிகளில் முதலே
தமிழர்களின் மரபே அடையாளமே அன்னைமொழியே
உயிரினும் மேலான சித்தாந்தங்கள் மொழியே தமிழே அமுதே!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}