Poem: கைரேகை!

Jun 23, 2026,03:31 PM IST

கைரேகை பார்த்து எதிர்காலம் சொல்பவன் 

தன் தொழிலை செவ்வனே செய்கிறான்.... 


கைரேகை பார்த்து எதிர்காலம் அறிந்து கொள்ள முயற்சிப்பவன் 

தன் தொழிலின் பொன்னான நேரத்தை இழக்கிறான்.... 


நாளை என்பது நம் கையில் இல்லை 

ஆனால் நாளைய நாள் பூக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.... 




பிறகு ஏன் நாளை நம்மால் சிறப்பாக வாழமுடியும் என்ற நம்பிக்கை 

நம் மேல் நமக்கே இல்லாமல் போனது.... 


தன்னம்பிக்கை இருந்தால் ரேகை உள்ள கையாலே சாதனை பல புரிந்து 

அழியாரேகைபோல நம் வாழ்க்கையை  பதிக்க முடியும் வரலாற்று ஏட்டிலே... 

முடியும் என்பது நம்பிக்கை ஆனால்.. 


விரல்கள் பத்தும் மூலதனம் 

ஆனால்.. 

வெற்றியை நிர்ணயிக்கும் ரேகை உன் கையில்

வெற்றி தாண்டவம் ஆடும்........ 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்