Nellai.. அதிகாலையில் பயங்கரம்.. ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரை.. வெட்டிக் கொன்ற மர்மகும்பல்!

Mar 18, 2025,04:56 PM IST

திருநெல்வேலி:  நெல்லையில் ஓய்வு பெற்ற  காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜில் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு, ரம்ஜான் நோன்பு திறப்பதற்காக இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஓய்வு பெற்ற உதவிக் காவல் ஆய்வாளர் ஜாஹிர் உசேன் பிஜில்   சென்றிருந்தார். தொழுகை முடிந்து வீடு திரும்பும் வழியில்  அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள்  அவரை வழிமறித்து தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற ஜாகிர் உசேனை மடக்கி பிடித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுமதித்தனர்.




இதனைத் தொடர்ந்து நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர போலீசார் மேற்கொண்டனர். மறைந்த கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி இருந்தது தெரியவந்துள்ளது.  இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த சிலருக்கும் வக்புக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான முன்விரோத பிரச்சனை உள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, முன் விரோத பிரச்சனையால் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேனை மர்ம கும்பல் திட்டமிட்டு  படுகொலை செய்திருக்கிறாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் முன்னாள் காவல் ஆய்வாளர்களை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்த பதட்டத்தை கட்டுப்படுத்த மாநகர காவல்துறை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்