சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை இன்று உயரத் தொடங்கியுள்ளது.
தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக ஏறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சவரனுக்கு ரூ. 72 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஏற ஆரம்பித்துள்ளது.
பண்டிகை நாட்களில் அனைத்து தரப்பு மக்களும் நகை வாங்குவது என்பது முக்கிய மான ஒன்றாகி உள்ளதால், நகையின் விலையும் உயர தொடங்கி விட்டது. இன்றை விலை என்ன தெரியுமா..!

1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5695 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 9 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45560 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6213 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49704 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.80 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 598.40 காசாக உள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் உயரத்தொடங்கியுள்ளது.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}