சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. நேற்று சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று மட்டும் ஒரு சவரன் ரூ.360 உயர்ந்துள்ளது.
நகை விலை உயர்வால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். சீன மக்கள் பங்குச் சந்தையை நம்பாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தான் தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருகிறது. இந்ந நிலை உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் நகை வாங்குபவர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6755 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.360 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7369 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,952 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 2 ரூபாய் உயர்ந்து 1 கிராம் வெள்ளி விலை 88 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2000 உயர்ந்து ரூ.88.000 க்கு விற்கப்பட்டு வருகிறது.
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}