சென்னை: நவராத்திரி பண்டிகை, தீபாவளி, கல்யாண சீசன் நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாடிக்கையாளர்கள் செம குஷியாகி உள்ளனர். தங்கம் விலையும் இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்றும் குறைந்தே காணப்படுகிறது. தங்கம் விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று அன்று சவரனுக்கு ரூ.360 என உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.208 குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரட்டாசி மாதம் முடிய உள்ள நிலையில் தங்கம் விலை குறைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்து வரும் ஐப்பசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் வருவதால் இன்றே தங்க நகை வாங்குவோர் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏனெனில், ஐப்பசி பிறந்து விட்டால் தங்கம் விலை குறைவது சந்தேகமே, அத்துடன் தங்கத்தின் தேவையும் அதிகமாகும் என்பதால் மக்கள் தற்பொழுது நகை வாங்கி வருகின்றனர். தற்போது நவராத்திரி வேறு நடந்து வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்கம், வீடு வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் உரிய சிறப்பான காலம் என்று வேறு சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5515 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44120 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6016 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.73.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 588.80 காசாக உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}