புது தில்லி: அடையாள மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், உயிரிழந்த நபர்களின் 2.5 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுமார் 134 கோடி நேரடி ஆதார் உரிமையாளர்களைக் கொண்ட ஆதார் அமைப்பு, உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாகும். இது குறித்து அமைச்சர் கூறுகையில், ஆதார் தரவுத்தளத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து பராமரிக்கும் ஒரு நாடு தழுவிய தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமான உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை முடக்கியுள்ளது.

ஒரு நபர் இறக்கும் போது, அவரது ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ அல்லது நலத்திட்ட உதவிகளைப் பெற அந்த அடையாளத்தைப் பயன்படுத்தி மோசடி செய்வதையோ தடுக்க அதை முடக்குவது அவசியமாகிறது. அடையாள மோசடி அபாயத்தைக் குறைக்கவும், பலன்கள் தகுதியுள்ளவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் கைரேகை மற்றும் கண் கருவிழித் தரவுகளை 'லாக்' (Lock) செய்து கொள்ளலாம். இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத நபர்கள் உங்கள் ஆதாரைப் பயன்படுத்த முடியாது.
பணப் பரிவர்த்தனைகளின் போது பயனாளி நேரில் இருப்பதை உறுதி செய்ய 'உயிருடன் இருப்பதை கண்டறியும்' (Liveness detection) வசதியுடன் கூடிய முக அங்கீகார முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப்லைன் அடையாளச் சரிபார்ப்பிற்காக ஆதார் பாதுகாப்பான QR கோடு மற்றும் இ-ஆதார் போன்ற வசதிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
UIDAI எக்காரணம் கொண்டும் ஆதார் வைத்திருப்பவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை யாருடனும் பகிர்வதில்லை. மேலும், ஆதார் எண்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றைப் பாதுகாப்பாக (Encrypted format) சேமித்து வைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தரவுத்தளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்துதல், போலி எண்களை நீக்குதல் மற்றும் புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தத் தளம் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}