- க.யாஸ்மின் சிராஜூதீன்
மழலை சிரிப்பு
மனச கொள்ளையடிக்குது
பொக்கைவாயில் சிரிப்பு பொங்கி வழியுது....
பல் முளைக்கல
பேச விழையுது
புது மொழிய தானே
பேசுது.....
இடம்பெயர முயற்சி
செய்யுது...
முட்டி போட்டு நம்மை ஓட வைக்குது....
தந்தி தவழ்ந்து நடக்கப் பார்க்குது...
விரல் பிடித்து நடந்து
நம்பிக்கை ஊட்டுது...

பட்டாம்பூச்சி போல வாழ்க்கை பறக்குது....
மழலை போல மீண்டும் மாற்றுது......
பல் இல்லாம
பொக்கைவாயில் பேச்சு குழறுது ....
நடந்த கால்கள் முடியாம கிடக்குது.....
ஓட்டம் எல்லாம் உதவி தேடுது....
இங்கே நிலையானது
என்ன இருக்குது....
குணம் ஒன்றே நீ இல்லாம
நின்று பேசுது....
வருவதும் போவதும்
யாருக்கும் தெரியல
நீண்ட பயணம் ஒரு நிமிடம் போல மறையுது...
வாழும் நாளில் மகிழ்ந்து வாழ்ந்திடு...
ஊர் போற்றும் மனிதனாய் இருந்திடு!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
{{comments.comment}}