- க.யாஸ்மின் சிராஜூதீன்
மழலை சிரிப்பு
மனச கொள்ளையடிக்குது
பொக்கைவாயில் சிரிப்பு பொங்கி வழியுது....
பல் முளைக்கல
பேச விழையுது
புது மொழிய தானே
பேசுது.....
இடம்பெயர முயற்சி
செய்யுது...
முட்டி போட்டு நம்மை ஓட வைக்குது....
தந்தி தவழ்ந்து நடக்கப் பார்க்குது...
விரல் பிடித்து நடந்து
நம்பிக்கை ஊட்டுது...

பட்டாம்பூச்சி போல வாழ்க்கை பறக்குது....
மழலை போல மீண்டும் மாற்றுது......
பல் இல்லாம
பொக்கைவாயில் பேச்சு குழறுது ....
நடந்த கால்கள் முடியாம கிடக்குது.....
ஓட்டம் எல்லாம் உதவி தேடுது....
இங்கே நிலையானது
என்ன இருக்குது....
குணம் ஒன்றே நீ இல்லாம
நின்று பேசுது....
வருவதும் போவதும்
யாருக்கும் தெரியல
நீண்ட பயணம் ஒரு நிமிடம் போல மறையுது...
வாழும் நாளில் மகிழ்ந்து வாழ்ந்திடு...
ஊர் போற்றும் மனிதனாய் இருந்திடு!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}