- க.யாஸ்மின் சிராஜூதீன்
மழலை சிரிப்பு
மனச கொள்ளையடிக்குது
பொக்கைவாயில் சிரிப்பு பொங்கி வழியுது....
பல் முளைக்கல
பேச விழையுது
புது மொழிய தானே
பேசுது.....
இடம்பெயர முயற்சி
செய்யுது...
முட்டி போட்டு நம்மை ஓட வைக்குது....
தந்தி தவழ்ந்து நடக்கப் பார்க்குது...
விரல் பிடித்து நடந்து
நம்பிக்கை ஊட்டுது...

பட்டாம்பூச்சி போல வாழ்க்கை பறக்குது....
மழலை போல மீண்டும் மாற்றுது......
பல் இல்லாம
பொக்கைவாயில் பேச்சு குழறுது ....
நடந்த கால்கள் முடியாம கிடக்குது.....
ஓட்டம் எல்லாம் உதவி தேடுது....
இங்கே நிலையானது
என்ன இருக்குது....
குணம் ஒன்றே நீ இல்லாம
நின்று பேசுது....
வருவதும் போவதும்
யாருக்கும் தெரியல
நீண்ட பயணம் ஒரு நிமிடம் போல மறையுது...
வாழும் நாளில் மகிழ்ந்து வாழ்ந்திடு...
ஊர் போற்றும் மனிதனாய் இருந்திடு!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}