- சிவ .ஆ.மலர்விழி ராஜா
தரணியில் வாழ்ந்திட.....
இறைவனின் ஆசிகள் வேண்டும்...... !
தமிழ் நாட்டில் பிறந்திட.....
நம் தாயின் கருவறை
வணங்கிட வேண்டும்....!
பாரத தேசத்தில் தமிழ் நாட்டின் பண்பினை போற்றி
கரம் கூப்பி சிரம் தாழ வேண்டும்....!
தமிழ் நாட்டின் பெருமைதனை....
ஞாலமெல்லாம் நவின்றிட வேண்டும்.....!

ஞானிகளும் சித்தர்களும் சிறப்பித்த நாடு.....
தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு......
என்பதில் பெருமை கொள்ளவேண்டும்.....!
அன்புக்கும் பஞ்சமில்லை....
அன்னத்திற்கும்.....
குறைவில்லை என்ற தமிழரின்.....
சங்கின் நாதம் புகழ்பெற வேண்டும்......!
திருத்தலங்களில் எல்லாம் தெய்வத் தமிழ்.....
ஒலித்திட வேண்டும்......!
புண்ணிய பூமி எங்கள்
தமிழ் நாடென்று.....
நாளும் .....
புன்னகைத்திட வேண்டும்......!
வாழ்க தமிழ்நாடு
வளர்க தமிழ்மொழி
என்று......
வையகம் போற்றிட வேண்டும்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!
அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!
பிளஸ்டூ தேர்வில்.. சென்டம் போட்ட தங்கங்கள்.. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் டாப்!
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
+2 Exam results: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில்.. அரசுப் பள்ளிகள் அசத்தல்!
வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
{{comments.comment}}