- சிவ .ஆ.மலர்விழி ராஜா
தரணியில் வாழ்ந்திட.....
இறைவனின் ஆசிகள் வேண்டும்...... !
தமிழ் நாட்டில் பிறந்திட.....
நம் தாயின் கருவறை
வணங்கிட வேண்டும்....!
பாரத தேசத்தில் தமிழ் நாட்டின் பண்பினை போற்றி
கரம் கூப்பி சிரம் தாழ வேண்டும்....!
தமிழ் நாட்டின் பெருமைதனை....
ஞாலமெல்லாம் நவின்றிட வேண்டும்.....!

ஞானிகளும் சித்தர்களும் சிறப்பித்த நாடு.....
தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு......
என்பதில் பெருமை கொள்ளவேண்டும்.....!
அன்புக்கும் பஞ்சமில்லை....
அன்னத்திற்கும்.....
குறைவில்லை என்ற தமிழரின்.....
சங்கின் நாதம் புகழ்பெற வேண்டும்......!
திருத்தலங்களில் எல்லாம் தெய்வத் தமிழ்.....
ஒலித்திட வேண்டும்......!
புண்ணிய பூமி எங்கள்
தமிழ் நாடென்று.....
நாளும் .....
புன்னகைத்திட வேண்டும்......!
வாழ்க தமிழ்நாடு
வளர்க தமிழ்மொழி
என்று......
வையகம் போற்றிட வேண்டும்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}