தமிழ் நாட்டில் பிறந்திட..... நம் தாயின் கருவறை.. வணங்கிட வேண்டும்....!

Nov 03, 2025,10:18 AM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


தரணியில்  வாழ்ந்திட.....

இறைவனின் ஆசிகள் வேண்டும்...... !

தமிழ் நாட்டில் பிறந்திட.....

நம் தாயின் கருவறை

வணங்கிட வேண்டும்....!


பாரத தேசத்தில் தமிழ் நாட்டின் பண்பினை போற்றி 

கரம் கூப்பி சிரம் தாழ வேண்டும்....!

தமிழ் நாட்டின் பெருமைதனை....

ஞாலமெல்லாம் நவின்றிட வேண்டும்.....!




ஞானிகளும் சித்தர்களும் சிறப்பித்த நாடு.....

தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு......

என்பதில் பெருமை கொள்ளவேண்டும்.....!


அன்புக்கும் பஞ்சமில்லை....

அன்னத்திற்கும்.....

குறைவில்லை என்ற தமிழரின்.....

சங்கின்  நாதம் புகழ்பெற வேண்டும்......!


திருத்தலங்களில் எல்லாம்  தெய்வத் தமிழ்.....

ஒலித்திட வேண்டும்......!

புண்ணிய பூமி எங்கள் 

தமிழ் நாடென்று.....

நாளும் .....

புன்னகைத்திட வேண்டும்......!


வாழ்க தமிழ்நாடு 

வளர்க தமிழ்மொழி 

என்று......


வையகம் போற்றிட வேண்டும்.....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

news

இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

அதிகம் பார்க்கும் செய்திகள்