தமிழ் நாட்டில் பிறந்திட..... நம் தாயின் கருவறை.. வணங்கிட வேண்டும்....!

Nov 03, 2025,10:18 AM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


தரணியில்  வாழ்ந்திட.....

இறைவனின் ஆசிகள் வேண்டும்...... !

தமிழ் நாட்டில் பிறந்திட.....

நம் தாயின் கருவறை

வணங்கிட வேண்டும்....!


பாரத தேசத்தில் தமிழ் நாட்டின் பண்பினை போற்றி 

கரம் கூப்பி சிரம் தாழ வேண்டும்....!

தமிழ் நாட்டின் பெருமைதனை....

ஞாலமெல்லாம் நவின்றிட வேண்டும்.....!




ஞானிகளும் சித்தர்களும் சிறப்பித்த நாடு.....

தமிழ்நாடு எங்கள் உயிர் மூச்சு......

என்பதில் பெருமை கொள்ளவேண்டும்.....!


அன்புக்கும் பஞ்சமில்லை....

அன்னத்திற்கும்.....

குறைவில்லை என்ற தமிழரின்.....

சங்கின்  நாதம் புகழ்பெற வேண்டும்......!


திருத்தலங்களில் எல்லாம்  தெய்வத் தமிழ்.....

ஒலித்திட வேண்டும்......!

புண்ணிய பூமி எங்கள் 

தமிழ் நாடென்று.....

நாளும் .....

புன்னகைத்திட வேண்டும்......!


வாழ்க தமிழ்நாடு 

வளர்க தமிழ்மொழி 

என்று......


வையகம் போற்றிட வேண்டும்.....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்