Heavy rain Red Alert: தமிழ்நாட்டில்.. 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களில் ஆரஞ்சு!

May 16, 2024,06:00 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இன்று 3 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


3 மாவட்டங்களில் மிக மிக கனமழை:


தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட்  கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது .இதனால் இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.


இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். தாழ்வாழ பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மிக கனமழை:




திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக  கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இம்முறை அப்படி நேர்ந்து விடாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுத்து வருகின்றனர்.


11  மாவட்டங்களில் கனமழை:


தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை,  ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நாளை (மே 17) மிக கனமழை:


குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கனமழை:


விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


மே 18 மிக கனமழை:


கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கனமழை:


திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,ஆகிய 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 19 மிக கனமழை:


தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


கனமழை:


திருப்பத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்