மும்பை: புதிய கல்வி கொள்கையை மகாராஷ்டிராவில் அமல்படுத்தியது பாஜக கூட்டணி அரசு.
பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கட்ட வாரியான அமலாக்கத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 16ல் அறிவித்தது.
மகாராஷ்டிரா முழுவதும் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்பட உள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அரசு ஆணையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற மொழி வழிப் பள்ளிகள் ஏற்கனவே 3 மொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. ஏனெனில் மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளன. எனவே இது தானாகவே 3 மொழிகளை உள்ளடக்கியதாகிறது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை 2025 முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}