புதிய கல்வி கொள்கை மகாராஷ்டிராவில் அமல்... இனி இந்தி மொழி பாடம் கட்டாயம்!

Apr 17, 2025,12:11 PM IST

மும்பை: புதிய கல்வி கொள்கையை மகாராஷ்டிராவில் அமல்படுத்தியது பாஜக கூட்டணி அரசு.


பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கட்ட வாரியான அமலாக்கத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 16ல் அறிவித்தது. 


மகாராஷ்டிரா முழுவதும் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்பட உள்ளது. 


1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.




இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அரசு ஆணையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற மொழி வழிப் பள்ளிகள் ஏற்கனவே 3 மொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. ஏனெனில் மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளன. எனவே இது தானாகவே 3 மொழிகளை உள்ளடக்கியதாகிறது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை 2025 முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்