மும்பை: புதிய கல்வி கொள்கையை மகாராஷ்டிராவில் அமல்படுத்தியது பாஜக கூட்டணி அரசு.
பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் கட்ட வாரியான அமலாக்கத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 16ல் அறிவித்தது.
மகாராஷ்டிரா முழுவதும் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்பட உள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அரசு ஆணையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற மொழி வழிப் பள்ளிகள் ஏற்கனவே 3 மொழித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. ஏனெனில் மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளன. எனவே இது தானாகவே 3 மொழிகளை உள்ளடக்கியதாகிறது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை 2025 முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலோ மும்பை இந்தியன்ஸ்.. முதல்ல கேப்டனை மாத்துங்க.. ஆர்.அஸ்வின் வார்னிங்!
வலிமையான மனமும்.. தெய்வமும்.. நித்தியஸ்ரீயின் இரு கவிதைகள்!
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
{{comments.comment}}